மோடியின் கண் அசைவிற்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள்-வைகோ

மோடியின் கண் அசைவிற்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள்-வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் ஒரு அரசு செயல்படவில்லை .தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்தால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். மோடியின் கண் அசைவிற்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சுகின்றனர்.

இந்தி மொழி மட்டும் பேசப்படும் நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், அதில் தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள் இருக்காது. அமித் ஷாவிற்கு அரிச்சுவடிக்கூட தெரியாது. இந்தி மொழி திணிப்பு குறித்து பேச அமித் ஷாவிற்கு அருகதை கிடையாது .திராவிட இயக்க வரலாறு தெரியாத ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருப்பது சாபக்கேடு என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube