தமிழகம் தோந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது – ராமதாஸ்

  • நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.  
  • இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  

எந்தெந்த மாநிலங்கள் நிர்வாகத் திறமையில் சிப்பாக  உள்ளன என்ற பட்டியலை  மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது. இதில், நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் இந்தியாவின் 18 பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் தோந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவரது சகாக்களுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.