#Breaking : பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு விதித்த தடை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினை தடை விதிக்க தமிழக அரசு அதிரடி முடிவெடுத்தது.
இதனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்தது தமிழக அரசு. அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் ,  தண்ணீர் பாக்கெட் , பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் , பிளாஸ்டிக் கைப்பை மற்றும் பிளாஸ்டிக் கொடி என 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதே போல  பிளாஸ்டிக் தடையில் இருந்து விளக்கு அளிக்கும் பொருட்களின் பட்டியலையும் அரசு வெளியிட்டது. அதன்படி பால் , தயிர் ,எண்ணைய் பாக்கெட், மற்றும் மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு பிளாஸ்டிக் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் தடைக்கு எதிராக  பிளாஸ்டிக்  உற்பத்தியாளர்கள்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இதில் தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு விதித்த தடை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.