நீட் மசோதாவுக்கு விலக்கு பெறுவோம் என தமிழக அரசு ஏமாற்றி வந்தது கண்டனத்திற்குரியது-வைகோ

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் மசோதாவுக்கு விலக்கு பெறுவோம் என தமிழக அரசு ஏமாற்றி வந்தது கண்டனத்திற்குரியது .நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட தகவல் தமிழக அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும் .கிராமப்புற மாணவர்கள் கனவில் கூட மருத்துவப் படிப்பை நினைக்க முடியாத சூழலை பாஜக அரசு உருவாக்கியுள்ளது என்று கூறினார்.