24 மணி நேர உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அவசர உதவிக்கு தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இந்த 24 மணி நேர அவசர எண்களை 044 2951 0400, 044 2951 0500, 94443 40496, 87544 48477 தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பற்றிய தகவலை தெரிவிக்கலாம் என்றும் ஏதேனும் வைரஸ் தொற்று அறிந்தால் உடனடியாக தகவலை தெரிவிக்க இந்த உதவி எண்களை தொடர்புகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 70,000க்கும் மேலாக இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்