ஆங்கில மொழியின் மோகத்தால் தமிழ் மொழி அழியும் : நடிகை சுகாசினி

ஆங்கில மொழியின் மோகத்தால் தமிழ் மொழி அழியும் : நடிகை சுகாசினி

நடிகை சுகாசினி பிரபலமான நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குநருமாவார். இவர் தமிழில் என் பொம்மைக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனசோலை, சிந்து பைரவி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை சுகாசினி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ” மொழி என்பது ஒவ்வொருவரின் ஆளுமை, நாட்டில் மொழிப்பிரச்சனை இருக்க  கூடாது. ஆங்கில மொழியின் மோகமும், தேவையும் அதிகரிக்க, தமிழ் மொழி அழியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தேசிய விருதில் தமிழ் படங்கள் அதிகம் இடம் பெறாதது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube