ட்விட்டரில் புலவர் ஹர்பஜனை நெகிழ வைத்த தமிழ் ரசிகர்கள் !

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் போட்டியின் போது தங்கள் அணி தோல்வியை தழுவினாலும் ,வெற்றி பெற்றாலும் தமிழ் ட்விட் செய்வது வழக்கமாக வைத்து வருகிறார்.

இதனால் தமிழக  ரசிகர்கள் இவரை புலவர் என அழைத்து வருகின்றனர்.மேலும் தமிழ் பண்டிகைகள்  , மற்றும் முக்கிய நாள்களில் தமிழ் ரசிகர்களுக்கு தமிழில் டிவிட் செய்து வாழ்த்துக்கள் தெரிவிப்பார்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி 39-வது ஹர்பஜன் சிங் பிறந்த நாளை கொண்டாடினர். ஹர்பஜன் சிங்கிற்கு தமிழ் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்தனர்.அதற்க்கு அவர் வாழ்த்துக்கள் கூறிய தமிழ் உறவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் ட்விட்டரில் என் பிறந்தநாள்ல என்ன வாழ்த்துன தமிழ் உறவுகள் எல்லாருக்குமே ரொம்ப நன்றி. இன்னுமும் வாழ்த்துகள் வந்துகிட்டே இருக்கு. ஆனந்தக் கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்னு எனக்கு தோணுது.இந்த அன்பும் ஆதரவும் என்னைக்கும் தொடரணும்.தமிழ் மற்றும் சிஸ்கே ரசிகர்களால் நான் #ThankYouTamilnadu என பதிவிட்டு உள்ளார்.

author avatar
murugan