முதல் முறையாக சென்னை மாநகராட்சியுடன் கைகோர்க்கிறேன்…! – காமெடி நடிகர் விவேக் ட்விட்.

பிரபல தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக் நாளை(அக்.15) Apj. அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு/வழங்கும் விழாவை நடத்தவுள்ளார். நடிகர் விவேக் முதல் முறையாக சென்னை பெருநகராட்சியுடன் இணைைந்து இந்த விழாவை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், விவேக் தனது டிவிட்டரில் “அக் 15 நாளை அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாள் ! மரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் ! முதல் முறையாக சென்னை பெரிய நகராட்சி கைகோர்க்கிறதுஸ! மரக்கன்றுகள் கொடுத்து உதவுகின்ற சென்னை மாநகராட்சிக்கு நன்றி.” என ட்விட் செய்துள்ளார். அத்துடன் இவர் தனது மரம் நடும் விழாவின் போஸ்டரை பகிர்ந்துக்கொண்டார்.

author avatar
Vidhusan