ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்…!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மக்கள் மீதும் , அரசின் ராணுவ மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த சண்டையானது காலகாலமாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வார்டாக் மாகாணத்தில் இருக்கும் ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.மற்றும் அங்கே இருக்கும் ராணுவ தளத்தின் மீதும் , போலீஸ் பயிற்சி மையத்தின் மீதும் தீடிர் துப்பாக்கி சூடு நடத்தினர்
இந்த கொடூர தாக்குதலில் 12  பேர் கொல்லப்பட்டு ,30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 2 தீவிரவாதிகளும் ராணுவப்படை வீரர்களால் கொல்லப்பட்டனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment