இனி ஹிந்தி கற்பிக்கப்படாது-அமைச்சர் க.பாண்டியராஜன் அதிரடி..!

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி கற்பிக்கப்படாது என அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கும் திட்டத்திற்கு திமுக  உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஓர் உலக மொழி ,ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் ஹிந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கப்படுவதாக அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார்.