மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் அமலாக்கத்துறையால் கைது.!

WB Minister Jyotipriya Mallik

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநில ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மம்தா பேனர்ஜி முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். இவர் முன்னதாக உணவுத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது கொரோனா காலத்தில், அரசின் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் பல கோடி ரூபாய் அளவில் ஊழல் முறைகேடு நடந்ததாக இவர் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. பிரதமர் மோடியின் ரூ.21 கோயில் காணிக்கை.., காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியது … Read more

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

தாயின் இறுதி சடங்கை முடித்தபின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.  மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றுள்ளார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. இன்று தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நிலையில், தற்போது காணொளியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, … Read more

மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா சாஹா காலமானார்!

மேற்கு வங்க மாநில அமைச்சராக இருந்த சுப்ரதா சாஹா மாரடைப்பால் காலமானார். மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா (வயது 72) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். கடுமையான நெஞ்சுவலி காரணமாக இன்று காலை முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுப்ரதா சாஹா, 2011, … Read more

மேற்கு வங்கத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்! டிசம்பர் 30இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

மேற்கு வங்கத்தின் முதலாவது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்கத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக, ஹவுரா- நியூ ஜல்பைகுரி வழித்தடத்தில் வரும் டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு வழித்தடங்களிலும் பயண நேரம் 7.5 மணிநேரம் எனவும், வாரத்தின் ஆறு நாட்களில் இயங்கும் எனவும் கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஏகலப்ய … Read more

#JustNow: பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜிக்கு ஆகஸ்ட் 18 வரை நீதிமன்ற காவல்!

பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. மேற்கு வாங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான சோதனையில், அர்பிதா முகர்ஜி வீட்டில் மொத்த 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் பணி … Read more

#JustNow: மேற்கு வங்கத்தில் அமைச்சரவை மாற்றி அமைப்பு!

மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு. மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை மாற்றி … Read more

மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம்! 7 புதிய மாவட்டங்கள் – முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் தகவல். மேற்கு வங்க மாநிலத்தில் புதன்கிழமை அன்று அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மேலும், மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் … Read more

அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயம்..அமலாக்கத்துறை தீவிரம்!

அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயமானது அடுத்து அமலாக்கத்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயமாகியுள்ளதாக அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெர்சிடிஸ், ஆடி மற்றும் இரண்டு ஹோண்டா சிட்டி ஆகிய கார்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆடி ஒன்று கைப்பற்றப்பட்டது. மற்ற வாகனங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, … Read more

#BREAKING: மேற்கு வங்க அமைச்சர் பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்!

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு. ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கிய மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியிடம் இருந்து 51 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் பதவியில் … Read more

அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து மேலும் ரூ.27.9 கோடி ரொக்கம் பறிமுதல்!

அர்பிதா முகர்ஜியின் குடியிருப்பில் ரூ.28 கோடி ரொக்கம், 6 கிலோ தங்கம் பறிமுதல். மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கடந்த 23ம் தேதி கைது செய்திருந்தது. பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் சோதனையில் ஈடுபட்டது. இந்த ஊழல் நடந்தபோது மாநில கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, சுமார் 26 மணி … Read more