உள்ளாட்சி தேர்தல்;நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு..!

நாளை(அக்.6) உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன்காரணமாக,தேர்தலில் வேட்பாளர்கள் கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனையடுத்து,  முதற்கட்ட ஊரக உள்ளாட்சி … Read more

நேபாள் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பை இழந்தார் பிரதமர் ஓலி !

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் பிரதமர் பதவி ராஜினாமா செய்தார் கே.பி. ஓலி. நேபாளத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மாவோயிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.இதனையெடுத்து திங்கள்கிழமை நேபாள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி க்கு 93 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், மேலும் 124 பேர் எதிராகவும், 15 பேர் நடுநிலையாகவும் இருந்தனர், இதனால் பிரதமர் ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். மேலும் சபையில் … Read more

அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து, வீடியோ வெளியிட்ட நபர்…!

அதிமுக வேட்பாளருக்கு வாக்கு பதிவு செய்ததை, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.   ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் யாருக்கு வாக்களித்தோம் என வீடியோ எடுத்து வந்து, அரசியல் கட்சி பிரமுகர்களிடம் காண்பித்து, வாக்காளர்கள் சிலர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், பிள்ளையார் நத்தம் கிராமத்தில், 2 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு மையத்திற்கு வாக்களிக்க சென்ற இளைஞர்கள் சிலர், யாருக்கு வாக்களிக்கிறோம என செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். பின் அதை … Read more

சர்க்கார் பட பாணியில் வாக்களித்த முதியவர்….!

வேளச்சேரி தொகுதியில், 75 வயது முதியவர் ஒருவரின் வாக்கு கள்ளஓட்டாக பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேளச்சேரி தொகுதியில், 75 வயது முதியவர் ஒருவர், வாக்களிக்க சென்ற போது, அவரது ஓட்டு பதிவாகிவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தனது ஒட்டு கள்ளஓட்டாக பதிவு செய்யப்பட்டதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தான் வாக்களிக்க  வேண்டும் என முறையிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த முதியவரை, 49’p’ முறையில், முதியவரை வாக்களிக்க … Read more

பணியில் ஈடுபடுவோருக்கு வாக்குரிமை மறுக்கப்படக்கூடாது – உயர்நீதிமன்றம்

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அடுத்தடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என பலவேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் … Read more

#ElectionBreaking : தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வெளியிட்ட ‘வலிமை’ விளம்பரம்…!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ‘வலிமை’ என்ற தலைப்பில் தேர்தல் ஆணையம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம், புதிய நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்லக் கூடாது. ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ‘வலிமை’ என்ற தலைப்பில் தேர்தல் ஆணையம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

#BREAKING: தபால் வாக்கு..மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்..!

வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை  தபால் வாக்கிற்கு  விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளவர்கள் வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை  தபால் வாக்கிற்கு  விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தபால் வாக்களிக்க விரும்புவோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் … Read more

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்! பிற்பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவு!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இன்று இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 16-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் இன்று நடைபெறுகிறது. கொரோனா  மத்தியில் இந்த தேர்தல் நடைபெறுவதால், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்நிலையில்,பிற்பகல் 1 … Read more

மணமேடைக்கு செல்லும் முன் ஜனநாயக கடமையை ஆற்றிய மணமகன்.!

தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணமகன் மணமேடைக்கு செல்லும் முன் ஜனநாயக கடமையை ஆற்றிய இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 … Read more

கட்டாய வாக்களிப்பு பற்றிய பொதுநல வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி பதில்!

நம் நாட்டில் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமில்லை. விருப்பம் இல்லையென்றால் வாக்களிக்க தேவையில்லை என்றுதான் இருந்து வருகிறது. இந்த வழக்கத்திற்கு எதிராக, கட்டாயமாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி இன்று விசாரிக்கையில், மத்திய அரசு சார்பில், வாக்களிப்பது தொடர்பான கோரிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்திடமே அளிக்க வேண்டும் என கூறியது. இதனை ஏற்று இந்த வழக்கை தள்ளுபடி செய்தது, உச்சநீதிமன்றம்!