மைதானத்தில் சுருண்டு விழுந்து 9ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு.!

வேலூரில் அரசு பள்ளி மாணவன் மைதானத்தில் ஓடும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எனும் ஊரில் செயல்பட்டு வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கட்டு, அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களை பள்ளி மைதானத்தை சுற்றி ஓட சொன்னதாக தெரிகிறது. அந்த சமயம் மாணவன் மோகன்ராஜ், மைதானத்தில் சுருண்டு மயங்கி கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

வேலூரில் துணிகரம்.! சுவரில் துளையிட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை.!

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை கும்பல் நகைகளை திருடி சென்றுள்ளது. வேலூரில் நகரின் மையப்பகுதிக்கு அருகாமையில் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ளது ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை. இந்த கடை நேற்று இரவு 10 மணி வரை செயல்பட்டு பின்னர் கடை அடைக்கப்பட்டுஉள்ளது. இரவு காவலர்கள் மட்டும் இருந்துள்ள நிலையில், நள்ளிரவில், நகைக்கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு கீழ் தளத்தில் உள்ள நகைகளை ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. காலையில் கடை ஊழியர்கள் … Read more

45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா.. 45 கடைகளும் மூடல்.!

வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 45 கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து கொன்டே தான் செல்கிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி … Read more

ஆக்ரோஷமாக எரிந்த தீயில் 7,000 கோழிகள் கருகி நாசம்..நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகளில் இருந்த 7,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு . வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் நேற்று இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்துக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகள் மற்றும் கோழி உண்ணும் தீவனம் உள்ளிட்ட பொருட்கள்தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீ எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் … Read more

3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க வேண்டும்.! வேலூர் மாவட்டம் அதிரடி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில், தற்போது புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் இனி 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதி. ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 10 … Read more

ஊரடங்கு உத்தரவால் ஆதரவற்ற முதியவர் பட்டினியால் உயிரிழந்தார்.!

நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு தவிர மற்ற எதற்கும் வெளியில் வர அனுமதியில்லை.  இது போக ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு அரசும், சில தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் வேலூரில் ஒரு முதியவர் பட்டினியால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வேலூர், காட்பாடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துவிட்டார். இவர் அங்குள்ள பேருந்து … Read more

பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பெண் செய்த காரியம்-அதிர்ச்சி அளிக்கும் பின்னனி தகவல்

கைகுழந்தை வாடகை எடுத்து பொதுமக்களிடம் தன் குழந்தைப் போல் நடித்து பிச்சை எடுத்த பெண்  வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்     வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மரத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.துவக்கி வைத்துவிட்டு வருகையில் சாலையின் ஒரமாக பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பரிதாபமாக பிச்சை எடுத்து கொண்டிருந்ததை பார்த்த ஆட்சியர் அப்பெண்ணின் அருகில் … Read more

முருகப்பெருமானும் காதல் மனைவி வள்ளியும் சம உயரத்தில் இருக்கும் அதிசய தீர்த்தகிரி சிறப்புகள்!

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை நோக்கி முருகப்பெருமான் செல்லும்போது சற்று களைப்பாக இருந்ததால் இளைப்பாறி சென்ற இடம்தான் வேலூர் தீர்த்தகிரி சன்னிதானம். இங்கே முருகன் இளைப்பாறி சென்றதற்கான பாதச்சுவடுகள் கோயில் மலையடிவாரத்தில் தற்போதும் காணப்படும். இந்த கோயில் சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரி கோவிலில் மலையடிவாரத்தில் விநாயகர் சன்னதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதற்கு எதிரே கோவில் திருக்குளம் அமைந்துள்ளது. அதனருகே 222 படிகள் … Read more

மீண்டும் ஹிந்தி அழிப்பு போராட்டம்! குடியாத்தம் ரயில் நிலையத்தில் 22 பேர் அதிரடி கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் கொண்டாடப்பட்ட ஹிந்தி தினத்தன்று இந்தியா பன்முகம் கொண்ட நாடுதான். இருப்பினும் ஒரே நாடு ஒரே மொழி கலாச்சாரம் இருக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும். என கூறினார். இந்த கூற்று நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தென் மாநிலங்களில் இந்த கருத்து கண்டத்திற்குட்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதி திமுக தொழில்நுட்ப குழு தலைவர் ஞானபிரகாஷ் தலைமையில் திமுகவினர் குடியாத்தம் ரயில்நிலையத்தில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை அளித்து, … Read more

எந்த கட்சி பேனர் வைத்தாலும் ஓராண்டு சிறை நிச்சயம்! வேலூர் கலெக்டர் அதிரடி!

சென்னை, பள்ளிக்கரணை பிரதான சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர், சரிந்து சாலையில் வந்துகொண்டு இருந்த சுபஸ்ரீ பெண் பொறியாளர் மீது விழுந்தது. அதில் தடுமாறி அந்த பெண் கீழே விழுந்தபோது பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  தமிழக அரசு அதிகாரிகளை தனது ஆக்ரோஷமான கேள்விகளால் துளைத்தெடுத்தார். இதனால் பேனர் கலாச்சாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த … Read more