தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என நிதிநிலையை பொறுத்து முதலமைச்சரின் அலுவலகம் தான் முடிவு செய்யும் என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் உள்ள CBSE, ICSE பள்ளிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிகளில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. LKG, UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார். இல்லம் … Read more

ரூ.5,000 தொகுப்பூதியத்தில் LKG, UKG-க்கு ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என அறிவிப்பு. அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – தமிழக அரசு

தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசு ஏற்கனவே, ங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 3 வயது குழந்தைகளை எல்.கே.ஜி-யிலும், 4 மற்றும் அதற்க்கு மேல் உள்ள குழந்தைகளை யுகேஜி-யிலும் சேர்க்குமாறு … Read more

#BREAKING: LKG, UKG வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது – சமூகநலத்துறை விளக்கம்

சமூகநலத்துறையே தொடர்ந்து LKG, UKG வகுப்புகளை நடத்தும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன. அதன்படி மாநிலம் முழுவதும் 2,381 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து … Read more

#Breaking:இனி அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன. இந்நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும்,பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

Breaking: தமிழகத்தில் LKG, UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைப்பு ..

கொரோனா வைரஸ்  முன்னெச்சரிக்கை காரணமாக நேற்று  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் … Read more

Breaking: தமிழகத்தில் LKG, UKG மாணவர்களுக்கு விடுமுறை … அரசு அறிவிப்பு ..

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு கொரோனா … Read more

 7 மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி  வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

7 மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி  வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி திட்டம் தொடங்க முடிவு செய்தது .அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கையும் நடைபெற்றது . இந்த நிலையில்  அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர் சேர்க்கை  விகிதம் குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது .அதில்,2 மாவட்ட உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 143 பேர் சேர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .கோவை,திருச்சி, நாமக்கல் ,திருப்பூர்,கரூர், பெரம்பலூர், … Read more

இனிப்பான செய்தி.. தமிழகம் முழுவதும் 35,000 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., – யு.கே.ஜி., சேர்க்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . குறிப்பாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு திட்டம்,அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இணையதள வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புகள் … Read more

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை -அமைச்சர் செங்கோட்டையன்

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,  எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் அந்த பணியில் அமர்த்தப்படுவார்கள்.ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. ஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அத்தனை நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.