இதுதான் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா? – டிடிவி

ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட். ஆவின் நிறுவனம் பால் விலை உயர்வை தொடர்ந்து, நெய்யின் விலையையும் உயர்த்தியுள்ளது. இதற்க்கு அமமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர், ‘ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். ஒரே ஆண்டில் மூன்று முறை நெய் விலையை … Read more

திமுகவில் திறமையானவர்கள் இல்லையா..? – டிடிவி தினகரன்

குடும்பத்தின் அழுத்தம் காரணமாக மகனை மு.க.ஸ்டாலின் அமைச்சர் ஆகியுள்ளார் என டிடிவி தினகரன் விமர்சனம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமமுக பொது செயலாளர் தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவில் திறமையானவர்கள் யாரும் இல்லையா? குடும்பத்தின் அழுத்தம் காரணமாக … Read more

கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இல்லாமல், சமூகத்தின் வளர்ச்சி முழுமை அடையாது என்பதை புரிந்துகொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்கிடவும், உயர்வுகளை ஏற்படுத்தித் தந்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்றிடுவோம். வாழ்வின் தடைகள் அனைத்தையும் தகர்த்து, உலகம் … Read more

பிரதமர் வந்து ஒருவாரம் ஆன பின்னர் காவல்துறை மீது ஏன் இந்த குற்றசாட்டு.? டி.டி.வி.தினகரன் கேள்வி.!

தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு. தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை … Read more

திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் – டிடிவி

டிசம்பர் மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என டிடிவி பேட்டி.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி அவர்கள் மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும்; ஒன்றரை ஆண்டு ஆட்சியில் திமுக மக்களின் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக செயல்படாத நிலையில் உள்ளது; எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் … Read more

வீராங்கனை பிரியா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.! டிடிவி தினகரன் கருத்து.!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை நிச்சய வரவேற்கத்தக்கது. – டி.டி.வி.தினகரன்.  அண்மையில், சென்னை அரசு மருத்துவமனையில் வீராங்கனை பிரியா , தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததை தொடர்நது, தமிழக அரசு ப்ரியாவின் குடும்பத்திற்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்தது. 10 லட்சம் நிவாரண உதவி, பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் வாசிக்க சொந்த … Read more

வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன் – ஓ.பி.எஸ்

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் பேட்டி.  சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ஆதரவாளர்களைசந்தித்து பேசினார்.  அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்றும்  தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு … Read more

பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் – டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என டிடிவி தினகரன் பேட்டி.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை. 0.25% கூட அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. மிகப்பெரிய விரக்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஓர் அணியாக சென்றால்தான் திமுகவை … Read more

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்தேன் – டிடிவி

தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம் என டிடிவி தினகரன் பேட்டி.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்; அனைத்து விஷயங்களிலும் எதிர்த்து பேசுவது முறையானது அல்ல என தெரிவித்துள்ளார். நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம்; 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள … Read more

ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது – டிடிவி

உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என டிடிவி ட்வீட்.  ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க … Read more