நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் – தமிழக விவசாய சங்க தலைவர் பாராட்டு

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர் பாராட்டு. காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். … Read more

38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார். அதன்படி, … Read more

‘இடம் இல்லை’ – 11 நாட்கள் மரத்தில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞன்….!

தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மரத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு மே 4-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர் தனது குடும்பத்திற்கு கொரோனா பரவுவதை தடுப்பதற்காக 11 நாட்கள் மரத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் … Read more

மரத்தில் செதுக்கப்பட்ட பிரதமர் மோடியின் ஓவியம்! வித்தியாசமான முறையில் கோரிக்கை வைத்த சிற்ப கலைஞர்!

சமரேந்திர  பெஹேரா என்னும் அந்த ஓவியக் கலைஞர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கி உள்ளார். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் என்ற தேசிய பூங்காவில் சிற்ப கலைஞர் ஒருவர், பிரதமர் மோடியின் உருவப்படத்தை மரத்தில் செதுக்கி, வித்தியாசமான முறையில் தனது கோரிக்கையை தெரிவித்துள்ளார் சமரேந்திர  பெஹேரா என்னும் அந்த ஓவியக் கலைஞர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கி உள்ளார். … Read more

ஊட்டியில் மருத்துவக் கல்லூரிக்காக 1,838 மரங்கள் வெட்ட அனுமதி..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.447.32 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி அமையவுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம்மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ஊட்டி வனப்பகுதியில் அமையவுள்ள மருத்துவ கல்லூரி க்காக அங்கு 1,838 அயல்நாட்டு மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது. கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை, 90% யூக்கலிப்டஸ் மரங்களே என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.  வெட்டப்படும் … Read more

அதிசியம் மரத்தின் உட்பகுதியில் பற்றி எரியும் தீ! இது வரை 2,00,00,000 பார்த்த வைரல் வீடியோ!

இயற்கையின் சீற்றம் நாம் எதிர்பார்த்த வண்ணம் தான் வரும் என்று சொல்ல முடியாது. நாம் நினைத்து பார்த்திராத வகையில், இயற்கை பேரழிவுகள் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நாடன் பின் தான், இப்படியெல்லாம் நடக்குமா என்று சிந்தித்து ஆச்சரியப்படுகிறோம். அந்த வகையில், நீண்டு வளர்ந்து உயரமான மரத்தை மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து, இம்மரத்தின் உட்புறம் மற்றும் தீ பிடித்து எரிகின்றது. இது பார்ப்பதற்கே ஆச்சரியமான காட்சியாக உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை … Read more

ஜக்கி வாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் வாங்காமல் மரம் நட வேண்டும்-அன்புமணி கோரிக்கை

ஜக்கி வாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் வாங்காமல் தமிழகம் முழுவதும் மரம் நட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நாட்டில் ஏற்பட்டிருக்கும் புவி வெப்பமயமாதலைத் தடுக்க காலநிலை அவசர நிலை பிரகடனத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் .மேலும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தட்பவெட்ப சூழ்நிலைகள் குறித்து மாணவிகள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . ஈஷா மையத்தின் … Read more

மின்சாரம் திருடியவருக்கு 50 மரம் நட நீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் கடை நடத்தி வரும் ஒருவர் முறையாக கடை வாடகை கொடுக்காமல் இருந்ததால் கடை உரிமையாளர் மின் இணைப்பை துண்டித்து விட்டார்.பின்னர் அந்த கடைக்காரர்  மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்இணைப்பு கொடுத்து பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த மின்சார வாரியம்  கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தது. அப்போது கடை உரிமையாளர் தனக்கு தெரியாமல் கடைக்காரர் இணைப்புக் கொடுத்து பயன்படுத்தியதாக மின்வாரியத்திடம் கடை உரிமையாளர் கூறினார். பின்னர் வாடகைக்கு இருந்த கடைக்காரன் மீது  மின் வாரியம்  … Read more

மணிப்பூரை சேர்ந்த சிறுமியின் கண்ணீருக்கு கிடைத்த பரிசு!

இன்றைய நிலையில், இயற்கையை பொறுத்தவரையில் பாதி அழிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தங்களது சுயநலத்திற்காகவும், தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மக்கள் மரங்களை அழிக்கின்றனர். இதனால், பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவு என பல ஆபத்தான நிலைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் மணிப்பூரை சேர்ந்த 9 வயது சிறுமியான எலங்பம் வாலண்டினா தேவி, தற்போது இவர் 5-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் 1-ம் வகுப்பு பயிலும் போது, ஆற்றங்கரையில் 2 குல்முகர் மரங்களை நட்டு, அதனை … Read more

50 ஆயிரம் செலவில் சரிந்த ஆலமரத்தை உயிர்ப்பித்த கிராமமக்கள்! காரணம் என்ன?

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பல மனிதர்களின் உயிரை காவு வாங்கிய கஜா புயல், மரங்களை  மட்டும் விட்டு வைக்குமா? இந்நிலையில், வேதாரண்யம் அருகே உள்ள மறையநல்லூர் உச்சகட்டளையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த ஆலமரம் தான் அந்த கிராமத்தின் அடையாளமாகவே இருந்துள்ளது. இதனையடுத்து, இந்த பழைமையான ஆலமரத்தை மீட்டெடுப்பதற்காக, அந்த கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் … Read more