தேர்வுக்குழுவுக்கு அனுப்பவில்லை,எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? ஸ்டாலின் அறிக்கை

வேளாண் மண்டல  மசோதாவை தேர்வுக்குழுவுக்கு  ஏன் அனுப்பவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.   காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாத, திருச்சி-கரூர்-அரியலூர் … Read more

தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் -நாளை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

நாளை முதல் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் … Read more

பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது – தினகரன்

பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இன்று  2020 – 2021-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  தமிழக சட்டசபையில்  துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு  துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.பன்னீர் செல்வம் 10-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,  தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் … Read more

மத்திய பட்ஜெட் உரை 160 நிமிடங்கள்,தமிழக பட்ஜெட் 196 நிமிடங்கள்-நீண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த பன்னீர் செல்வம்

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை  196 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்.   இன்று  2020 – 2021-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  தமிழக சட்டசபையில்  துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்.சரியாக இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர் செல்வம்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு  துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.பன்னீர் செல்வம் 10-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பன்னீர் செல்வம் … Read more

#Breaking : 20 ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.எனவே சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் , தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

#TNBudget2020 : தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்

தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அவரது உரையில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ரூ.218 கோடி மதிப்பில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

#TNBudget2020 : கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க ரூ.75 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில், கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ம் ஆண்டில் ரூ.68.35 கோடி நிதி அள்ளிக்கப்பட்டது. 2020-21 ம் ஆண்டில் ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவியுடன் அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்  என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். … Read more

#TNBudget2020 : மின்சாரத் துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு

மின்சாரத் துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில்,மின்சாரத் துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

#TNBudget2020 : தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில்,தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “கீழடி அகழ் வைப்பகம்” அமைக்க ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறைக்காக ரூ.31.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது  என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

#TNBudget2020 : இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது ,  கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் & மறுசீரமைப்பு பணிகளுக்கு  நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.