கேலோ இந்தியா போட்டி – தமிழ்நாட்டிற்கு மேலும் 2 தங்கம்!

Khelo India Youth Games

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாளை (31ம் தேதி) வரை நடைபெறுகிறது. கேலோ இந்தியா போட்டிகள் இந்த முறை தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதால் தங்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில், … Read more

டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள் தேர்வு.. இதுவே முதல்முறை!

Leander Paes

ஆடவர் இரட்டையர் அல்லது கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் மற்றொரு முன்னாள் டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு (Tennis Hall of Fame) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.  அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. … Read more

ஆண்டின் சிறந்த வீராங்கனை.! முதன்முறையாக விருதை தட்டிச்சென்ற நம்பர்.1 டென்னிஸ் வீராங்கனை.!

நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்விடெக், முதன்முறையாக இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்விடெக், ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது பெற்றுள்ளார். மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட இந்த விருதை 21 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்விடெக், முதன்முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2022 இல் அதிக பைனல்ஸில் பங்கேற்பு, அதிக விருதுகள், … Read more

நான் இன்னும் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை செரீனா வில்லியம்ஸ் அதிரடி

23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தான் இன்னும் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை கூறியுள்ளார். திங்களன்று செரீனா வில்லியம்ஸ், தான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை என்றும், கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபனுக்குப் பிறகு விளையாட்டிலிருந்து விலகப் போவதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர் திரும்புவதற்கான வாய்ப்புகள் “மிக அதிகம்” என்று கூறியுள்ளார். தான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை “பரிணாமம்” என்றும், தனது குடும்பத்தை வளர்க்க விரும்புவதாகவும்,“ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.இது … Read more

கண்ணீர் மல்க டென்னிஸிலிருந்து விடை பெற்றார் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர், லண்டனில் நடந்த லேவர் கோப்பை போட்டியுடன் நேற்று கண்ணீர் மல்க டென்னிஸ் போட்டியிலிருந்து விடை பெற்றார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் 41 வயதான ரோஜர் ஃபெடரர், லேவர் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஃபெடரர், நேற்று ரஃபேல் நடாலுடன் ஜோடி சேர்ந்த இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார். போட்டிக்குப் பிறகு ரோஜர் ஃபெடரர், தனது ரசிகர்கள் மற்றும் ஐரோப்பா அணி வீரர்களுக்கு நன்றி கூறி கண்ணீருடன் … Read more

டென்னிஸ் எனது முழு அடையாளம் அல்ல.. குட்பை சொல்லும் ஜாம்பவான்… பேரதிர்ச்சியை ரசிகர்கள்…

டென்னிஸ் மட்டுமே எனது வாழ்க்கை கிடையாது. எனது வீட்டில் நேரம் செலவிடுவது. சாதாரண வழியில் வாழ்வை வாழ்வது நன்றாக இருக்கிறது. – ரோஜர் பெடரர் ஆத்மாத்தமான கருத்து. உலக புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை  டென்னிஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒரு ஜாமவனின் ரசிகர்கள் மட்டும் சோகத்தில் இருக்கின்றனர். அவர்கள் யாரென்றால் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். இவர் இந்த விம்பிள்டன் தொடரில் பங்கேற்கவில்லை. … Read more

#BREAKING: சென்னையில் உலக டென்னிஸ் போட்டிகள் – அமைச்சர் அறிவிப்பு

WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் போட்டி நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு. சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், உலக மகளிர் டென்னிஸ் போட்டித்தொடரை நடத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் … Read more

நான் டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேற விரும்பினேன் – 2019 யுஎஸ் ஓபன் சாம்பியன் பியான்கா!

இந்தியன் வேல்ஸ், கனடியன் ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆகியவற்றில் வெற்றி பெற்ற திறமையான டென்னிஸ் வீராங்கனை தான் இருபத்தி ஒரு வயதான பியான்கா ஆண்ட்ரீஸ்கு. இவர் 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலக முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் மிகவும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன்.  உண்மையை பேசுகிறேன். சொல்லப்போனால் நான் டென்னிஸ் விளையாட்டை விட்டு ஒரு காலத்தில் வெளியேற விரும்பினேன் என தெரிவித்துள்ளார். ஆனால், … Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்!முதல் பரிசு இத்தனை கோடியா?..!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.  நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை அதிகாலை (இந்திய நேரப்படி) 5.30 மணிக்கு தொடங்குகிறது.மொத்தம் ரூ.405 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டியானது,ஜன.30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில்,ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்சாண்டர் ஸ்வெரவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஆனால், இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டதால்,முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் இந்த … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நோவாக் ஜோகோவிச்!

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற நோவாக் ஜோகோவிச் தீவிரம். நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். … Read more