Republic Day 2024 : தமிழக காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருதுகள்… மொத்த லிஸ்ட் இதோ….

Republic day Awards for Tamilnadu Police

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலங்கலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தலைநகர் டெல்லி உட்பட அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். அதே இந்த வருடத்திற்கான குடியரசு தலைவர் விருது பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது . அதில் தமிழக காவல்துறையை சேர்ந்த 3 பேருக்கு குடியரசு தலைவர் விருது … Read more

காவல்துறை மீது பொய் குற்றசாட்டு வைத்தால் கடும் நடவடிக்கை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காவல்துறை மீது பொய்யான குற்றசாட்டு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     காவல்துறை மீது பொய்யான குற்றசாட்டு வைத்தால், அந்த குற்றசாட்டு ஆதாரம் இல்லாமல் சுமத்தப்பட்டால் குற்றம் சுமத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   காவல்துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தன்மை அறிந்து, ஆராய்ந்து செயல்பட வேண்டும் எனவும் உஉயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, காவல்துறையினர் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மங்களூரு குண்டு வெடிப்பு.! விசாரணை குறித்து பரவிய தவறான தகவல்.! வெளியான உண்மை நிலவரம்.!

மங்களூரு குக்கர் வெடிப்பு  சம்பந்தமாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – கர்நாடக ஏடிஜிபி தகவல். 2 நாட்களுக்கு முன்னர்கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில்  குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் படுகாயமடைந்தனர். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழகத்தில் உதகையில் ஒருவரிடமும், நாகர்கோவிலில் ஒருவரிடமும் சிம் கார்டு வாங்கியது மற்றும், அதில் தொடர்பு கொண்டது தொடர்பாக … Read more

கோவை கார் வெடிப்பு எதிரொலி.! தமிகத்தில் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு வெகு விரைவில்…

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எனும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்த விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்ததை தொடர்ந்து முதல்வர் பரிந்துரையின் … Read more

கோவை கார் வெடி விபத்து.! 900 பேரின் விவரங்கள் சேகரிப்பு.!

 கோவை கார் வெடி விபத்து சம்பவத்தை அடுத்து அரசியல் தொடர்பாக இருப்பவர்கள், இஸ்லாமிய இயக்கத்தில் இருப்பவர்கள் என கிட்டத்தட்ட 900 பேரின் விவரங்கள் போலிசாரால் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி உக்கடம் அருகே காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்ததில் முபின் வீட்டில் 76 கிலோ வேதிப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முபினுக்கு … Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மறுப்பு.! முதல்வர் ஸ்டாலின் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி.! சீமான் வரவேற்பு.!

தமிழக காவல்துறையினர், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்ததற்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரவேற்பு மற்றும் நன்றி என டிவீட் செய்துள்ளார்.   தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்த உயர்நீதிமன்ற அனுமதியோடு திட்டமிட்டு இருந்தனர். அதற்க்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழக காவல்துறையின் இந்த முடிவுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து … Read more

#Breaking : காவலர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவிரைவாக பரவி வருகிறது.தொற்றைக்கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது அரசு அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் முழுவதும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல் கூடிய ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை சுற்றிக்கையாக அனுப்பி உள்ளார்.அந்த சுற்றறிக்கையில் காவர்கள்  விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.எனவே பணியாற்றக்கூடிய  காவலர்கள்  மிக எச்சரிக்கையாக இருக்கவும், கைது செய்யபவர்களை  காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய … Read more

ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் பிரதமருக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.  இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். இன்று இரவு பிரதமர் மோடி, ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.  இந்த சமயத்தில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக … Read more

ஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் ரெடி! மாவட்ட வாரியாக முதற்கட்ட விசாரணை!

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ பார்ப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து இருந்தது.  தற்போது தமிழகம் முழுவதும் 3000 பேர் லிஸ்ட் ரெடியாக உள்ளது. அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற உள்ளது.  அண்மையில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதிகமாக ஆபாச படம் பார்த்தவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு சென்னை முதலிடம் பிடித்து இருந்தது. அதிலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ பார்ப்பவர்கள் அதிகம் என கூறப்பட்டது. இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தடுக்கும் வகையில் தமிழக … Read more

தொடர் கொலைகள் காரணமாக தூத்துக்குடி நெல்லை ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலைகள் நடந்து வருகிறது .இந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளது அதில் தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் நடந்த இரட்டைக்கொலை அதிர்ச்சியை ஏற்படத்தியது.அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக  மற்றொரு கொலை நடந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 19 கொலைகள் நடந்துள்ளது இந்நிலையில் தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்கள் நெல்லையில் 2 காவல் … Read more