குடியை விடு.! படிக்க விடு.! முதமைச்சர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்ட சிறார்கள்.!

சேலத்தை சேர்ந்த ஆகாஷ், விக்டோரியா, ஆதாரஸ், சபரி, சுப்ரியா ஆகிய சிறார்கள் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இருக்கும் முதல்வர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி முதல் அந்த ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன. அதன் படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகள் திறந்தன.  இதே போல நாளை முதல் தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர … Read more

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில் முதலமைச்சர் திடீர் ஆய்வு.!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு தமிழகம் வந்தவர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில்  இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டந்தோறும் உள்ள முகாம்களில் தங்கவைத்து தனிமைப்படுத்துமாறு முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.  வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடம், அவர்களுக்கான மருத்துவ, சுகாதார வசதி என அனைத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் ஆய்வு செய்தார். சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன்.!

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் 3 ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள பால் சுமார் 1,80,000 லிட்டர் வீணாகியுள்ளது.  இதனை தமிழக அரசிடம் கேரள அரசு சார்பில் கூறியுள்ளது. இதனை அடுத்து, தமிழகம் சார்பில் ஈரோடு ஆவின் பால் நிறுவனம் கேரளாவில் 50,000 லிட்டர் பாலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாம். இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என தகவல் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : தமிழக ஆளுநரை சந்திக்க உள்ள முதல்வர் பழனிச்சாமி.!

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளத.   இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க்க உள்ளாராம். அப்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனராம். 

கர்ப்பிணிகளுக்கு தனி கவனம்.! அவசர அழைப்புக்கு 102 மற்றும் 104-ஐ அழைக்கலாம்.!

கொரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்ப்பிணி பெண்கள் நலன் குறித்து முக்கிய தகவலை கூறியுள்ளார். அதன்படி, வரும் 2 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் பிரசவிக்க உள்ளனர். அவர்களின் உடல்நலன் குறித்து மருத்துவ அலுவலர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும் எனவும், மேலும், கர்ப்பிணிகள் அவரச … Read more

முதல்வர் அறிவித்த மளிகை கடை, பெட்ரோல் பல்க் உள்ளிட்டவைகளுக்கான நேர கட்டுப்பாடு இன்று முதல் அமல்.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ம்ருர்த்துவமனைகளும்,  மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் … Read more

காணொளி மூலம் அனைத்துக்கட்சி கூட்டம்! முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கடிதம்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  இதனை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரிடம் பிரதமர் தீவிர ஆலோசனை!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை இந்தியாவில் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. அதுவரை மக்கள் அத்யாவசிய தேவைகள் தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழகத்தில் ஏற்கனவே தமிழக முதல்வர் மார்ச் 31 வரை அமல்படுத்தியிருந்த 144 தடை பிரதமர் கூறியதுபோல ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடரும் என அறிவித்தார். … Read more

‘அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்!’ – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பி.எச்.பாண்டியன் நேற்று சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், சட்ட ஆலோசகர் எனவும் பல பதவிகளில் முக்கிய பங்காற்றியவர் பி.எச்.பாண்டியன். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வருத்தத்தை இரங்கல் தெரிவித்தனர். இவரது இறப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது இரங்கலை … Read more

தமிழக முதல்வர் தலைமையில் மெகா ஹிட் படத்தின் வெற்றி கொண்டாட்டம்! எங்கே? எப்போது?

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான … Read more