மீண்டும் பறவை காய்ச்சல்.. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

bird Flu

birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் சில வாத்து பண்ணைகள் இருக்கிறது. அதில் வளர்ந்து வந்துகொண்டு இருந்த வாத்துகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தொடர்ச்சியாக உயிரிழந்துகொண்டே வந்தது. இதன் காரணமாக நடத்தப்பட்ட சோதனையில் உயிரிழந்த வாத்துகள் பறவை காய்ச்சல் பரவி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த பறவை காய்ச்சல் பரவலை … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படி படியாக குறையும்.!

bodyheat

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது இன்று முதல் 12ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3° -5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். … Read more

தென்தமிழக மக்களுக்கு ஜில் நியூஸ்…வருகிறது மழை.!

summer rain

Weather Update: தென்தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 11ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான … Read more

மக்களே!! வாட்டி எடுக்க போகும் வெப்ப அலை…வானிலை மையம் எச்சரிக்கை.!

heat wave tn

Weather Update: வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை … Read more

எச்சரிக்கை…டெல்லியில் குறைந்து தமிழகத்தை வாட்டும் வெப்பநிலை.!

DHELI - tn weather

Temperature: டெல்லியில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையான 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. READ MORE – உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம் அதாவது, தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை … Read more

வடதமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

rain update

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 2024 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய துறைகளின் வரிச்சலுகைகள்… தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதைப்போல, நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்.!

IMD ChennaiRain

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் ஜன.28ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இன்று நீலகிரியில் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு..! சென்னை நிலவரம்: அடுத்த 48 மணி நேரத்திற்கு … Read more

பிரதமர் மோடி தமிழகம் வருகை – 40 மீனவர்கள் விடுதலை.!

modi tn visit

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்த புகாரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைபிடித்து செல்கிறார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருவதை ஒட்டி இலங்கை சிறைகளில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 40 … Read more

தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

rain

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது. அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. தென்காசி, தேனி, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் திண்டுக்கல், … Read more

மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2,976 கோடி…உபிக்கு ரூ.13,088.51 கோடி!

Central Govt tax

மாநில அரசின் உள்கட்டமைப்பு திட்ட பணிகளுக்காக  2024 ஜனவரி 10ஆம் தேதி கொடுக்க வேண்டிய வரிப்பகிர்வு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 28 மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடியை விடுவித்தது.அதில், மத்திய அரசு அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.13,088.51 கோடி விடுவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளை வலுப்படுத்த … Read more