விடைபெற்றார் சுஷ்மா ! மயானத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது

மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. சுஷ்மா சுவராஜ்  மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.இவருக்கு வயது 67 ஆகும். இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுஷ்மாவின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.குடியரசு தலைவர் ,பிரதமர் உள்ளிட்டோர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள்.இதற்கு பின்னர் சுஷ்மாவின் உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பின் சுஷ்மா சுவராஜ் இறுதி ஊர்வலமாக … Read more

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு மாநிலங்களவையில் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ,துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த் நிலையில் இன்று … Read more

மறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த தலைவர்கள்

டெல்லியில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள சுஷ்மாவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பலர் நேரில் சென்று சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ,பாஜக மூத்த தலைவர் … Read more

BREAKING: ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமனம்!குடியரசு தலைவர் உத்தரவு

ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜை  நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ஆந்திர மாநில ஆளுநராக  நரசிம்மன் இருந்துவருகிறார் .அவருக்கு பதிலாக சுஷ்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் டெல்லி முதலமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை குடியரசு தலைவருக்கு ராக்கி கட்டிய..! வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா..!!

இன்று நாடுமுழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.வட மாநிலங்களில் வெகு விமர்சையாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.உடன் பிறந்த அண்ணன்,தம்பி உறவுகளுக்காக கொண்டாடப்படும் இவ்விழாவில் அவர்களின் கையில் ராக்கி கட்டி ஆசியியை பெறுவர்.ராக்கி கட்டிய தங்கைக்கு பரிசு வழங்குவர் உடன்பிறப்புகள் இவ்வாறு கொண்டாடப்படும் இதனிடையே துணை குடியரசு தலைவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடினார். DINASUVADU

மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் சந்தித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்கள் …!!

புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இருந்து புறப்படும் போது வளாகத்தின் வெளியே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்கள் சந்தித்துள்ளனர். மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக் கோரியும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அருகில் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒய்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தார்கள் … Read more