பெகாசஸ் உளவு விவகாரம்- விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது..!

பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.   பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் வந்தது. அப்போது, பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்..? பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, பெகாசஸ்உளவு விவகாரத்தில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த … Read more

#BREAKING : பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் – உச்சநீதிமன்றம் கேள்வி..!

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக இதுவரை எந்த புகார்களும் அளிக்கப்படாமல் இருப்பது ஏன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் … Read more

பலாத்காரம் செய்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்புவதாக இளம்பெண் மனு ..!

கேரளா இளம்பெண் தன்னை பலாத்காரம் செய்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராபின் வடக்கும்சேரி (40) அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பாரதியார் ஆக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த ஒரு சிறுமியை பாதிரியார் ராபின் சர்ச்சில் வைத்து பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பிணியான பின்னர் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்து. இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு … Read more

மாவட்ட நீதிபதி மரணம் – அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் அரசுக்கு உத்தரவு…!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் அவர்கள் சாலையோரம் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த நீதிபதியின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை … Read more

மாவட்ட நீதிபதி கொலை.., உச்சநீதிமன்றம் விசாரணை..!

ஜார்கண்ட் மாநில நீதிபதிகொலை தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் நடைபயிற்சிக்காகச் சென்ற மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் சாலையோரம் உயிரிழந்து கிடைந்தார். நீதிபதி வாகனம் இடித்து உயிரிழந்திருக்கக் கூடும் என காவல்துறை முதலில் கருதினர். பின்னர், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த நீதிபதி உத்தம் ஆனந்திற்கு அருகில் வந்த சிறிய ரக சரக்கு வாகனம் அவர் மீது இடித்துவிட்டு அதிவேகமாக சென்றது … Read more

மேலும் 6 மாத கால அவகாசம் – ஸ்டெர்லைட் மனுதாக்கல்..!

ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் 6 மாத காலம் மேற்கொள்ள அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில்,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வந்தனர்.இதனால்,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கபட்டது.இதனையடுத்து,ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் மூன்று … Read more

பாபா ராம்தேவ் அளித்த மனுவை  அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு…!

இந்திய மருத்துவ சங்கங்கள் (ஐ.எம்.ஏ)  தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்களில் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கோரிய பாபா ராம்தேவ் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார். பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் … Read more

உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் – உச்சநீதிமன்றம்

உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் அனல்மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி,  தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை காளிமுத்து என்பவர் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 1,342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் என்றும், எந்த பொது … Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு..!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவு. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் , கடமை மத்திய அரசுக்கு உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு  வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இழப்பீடு எவ்வளவு என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம். பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவு 12-ன் படி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்.டி.எம்.ஏ.வின் கடமை எனவும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்புச்சான்றிதழ் வழங்கும் … Read more

கொரோனாவால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் மௌன அஞ்சலி!

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 77 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் பல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செவிலியர்கள் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கியமான அமைச்சர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்தனர். மேலும், இந்த கொரோனா தொற்று … Read more