இது நடந்தால் மத்திய – மாநில அரசுகளின் உறவு சிக்கலாகிவிடும் – டிடிவி தினகரன்

இந்திய ஆட்சிப்பணி விதிகளை மத்திய அரசு திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று அமமுக பொதுசெயயலாளர் டிடிவி தினகரன் ட்வீட். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இப்படி ஒரு … Read more

மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்கமாட்டோம் – அமெரிக்க நிறுவனங்கள் கைவிரிப்பு !

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக்கியுள்ளனர். மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க அனுமதி இல்லை என்று மாடர்னா, ஃபைசர் ஆகிய அமெரிக்க தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை அதிகரித்துள்ளனர். இந்நிலையில், மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனத்தை அணுகியுள்ளன. பஞ்சாப் மாநில அரசு கொரோனா தடுப்பூசியான மாடர்னா, ஃபைசர் ஆகிய நிறுவனத்தை நேரடியாக … Read more

நீதித்துறைக்கு எதிரான கருத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்!

நீதித்துறைக்கு எதிரான கருத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வந்தாலும், ஆந்திராவின் நீதித்துறைக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது சில சர்ச்சைகளை கிளப்பியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்டசபை சபாநாயகர் தம்பினேனி  சீதாராம் மற்றும் துணை முதல்வர் … Read more

நிதி நெருக்கடியால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவித்தது மத்திய அரசு.!

பொது முடக்கத்தால் நிதி நெருக்கடியால் தவிக்கும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசுக்கு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் அனைத்து மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு … Read more

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்.!

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்டு, 25 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி வருபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என அரசு எச்சரித்துள்ளது.  இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட … Read more

எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் உள்ள எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபு, கைவினைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று மீதமுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவுட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபூர்வா ஐஏஎஸ், உயர்க்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா, ஆவணக் காப்பகங்கள் … Read more

முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்று கொண்டிருக்கிறது.! அமைச்சர் கருத்து.!

சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார். அதில், ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும் வழங்கவேண்டும். சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும்  வழங்கவேண்டும். மாநில … Read more

உஷார் மக்களே.! குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம்.! அதிரடி காட்டிய தமிழக அரசு.!

பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை விரிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கண்டயிடங்களில் அசுத்தம் செய்வது, குப்பையை கொட்டுவது, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது மற்றும் வாகன புகைகள், போன்ற செயல்களால், பல தொற்று நோய்கள் மக்களிடம் பரவி வருகிறது. பின்னர் ஆங்காகே பயன்படுத்தும் … Read more

ரூ.564 கோடி பட்ஜெட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா.!

சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்கா. அதற்கு ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிக பெரிய நவீன கால்நடை பூங்கா அமைப்பதற்காக ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்காவில், கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களுக்கான இனப்பெருக்கப் பண்ணை, … Read more

மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க அறவழி போராட்டம்..கருணாஸ் பேட்டி…!!

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் அவர்களின் பெயரை வைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வழியிலே சட்டத்திற்குட்பட்டு அறவழியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதாக கருணாஸ் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தேவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்ட காரர்களை கைது செய்தனர்.இதையடுத்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரான … Read more