#BREAKING: ஹைட்ரோகார்பன் திட்டம் -பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் எடுப்பதற்கான ஏல  அறிவிக்கையை  நிறுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10.6.2021 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி,  தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். தொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், … Read more

டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை முதல்வர் திரும்ப பெறவேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்..!

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவையும் முதலமைச்சர் திரும்ப பெறவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 14-ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கை வருகின்ற 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் … Read more

4,061 கிலோ மீட்டர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேர்வதை அரசு உறுதி செய்யும். ரூ.65.10 கோடியில் சுமார் 4 ஆயிரத்து 61 கிலோ மீட்டர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதலமைச்சர் பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேட்டூர் அணையின் வரலாற்றில் 88-ஆவது முறையாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை நீர் கடைமடை வரை சென்று சேர ரூ.65.10 கோடி மதிப்பில் … Read more

#BREAKING: மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். மேட்டூா் அணைப்பாசனம் மூலம் 12  மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும். இந்த நாள்களில் விவசாயிகளுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். இந்நிலையில், இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 … Read more

#BREAKING: ஜூன் 17-ல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு , தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம்  வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின், முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் … Read more

கல்லணையில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு செய்து வருகிறார். கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் … Read more

விபத்தில் இறந்த கர்ப்பிணி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலக்ஷ்மி குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலக்ஷ்மி குடும்பத்திற்கு 5 லட்சமும், விபத்தில் இறந்த ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா குடும்பத்துக்கும் தலா 3 லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி காவல் நிலைய … Read more

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை..!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை அளித்துள்ளனர். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை அளித்துள்ளனர். இதனால், ஜூன் 14 ஆம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் 21-ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில்  தளர்வு இல்லை எனவும்  பிற மாவட்டங்களில் … Read more

புதிய தளர்வு – ஆலோசனையை தொடங்கிய முதல்வர் ..!

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதியுடன் தளர்வுடன் கூடிய ஊரடங்கு காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பதா..? அல்லது மேலும் தளர்வுகள்  அளிப்பதா..? பற்றி உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர், மருத்துவர் துணைச்செயலாளர், டிஜிபி உள்ளிட்ட … Read more

கல்லணையை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

நாளை கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். நாளை மறுநாள் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார். கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக  சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக, நாளை காலை சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கல்லணை கால்வாய்க்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் … Read more