இலங்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்- வைரல் வீடியோ உள்ளே!

இலங்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்களால் அங்குள்ள மக்கள் கடலின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இருக்குமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.  பொதுவாக கடல் வாழ் உயிரினங்கள் வழி தவறுவதாலோ அல்லது கடலில் ஏற்படக்கூடிய மாறுபட்ட சூழ்நிலை காரணமாகவோ கரை ஒதுங்குவது அல்லது இறந்து கூட்டமாக கடல் நீரால் அடித்து கரைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இந்நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பு கடற்கரையில் கடந்த சில தினங்களாக கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுக்கியுள்ளது. உயிருடன் கரை ஒதுங்கியதால் மக்கள் … Read more

அட நம்ம பிக் பாஸ் தர்ஷனா இது? அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

இலங்கையிலிருந்து வந்து உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்தான் தர்ஷன். அதன் மூலம் அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் சொந்தக்காரரானார். இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடும் தர்ஷன், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ  இது அந்த புகைப்படம்,           View … Read more

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி !

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக நேற்று வெளிநாடுகளுக்கு புறப்பட்டார். நேற்று மாலை மாலத்தீவுக்கு சென்ற நிலையில் இன்று இரண்டாம் நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையின் கொழும்பு நகர விமான நிலையத்தில் அந்நாட்டு, குடியரசுத் தலைவர் ரணில் விக்ரம்சிங் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மலர்க்கொத்து குடுத்து வரவேற்றார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில் பிரதமரின் வரவேற்பு குறிப்பிடத்தக்கது.

 ஏழுமலையான் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே….!! 

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்தார்.மேலும் அவர் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது தேவஸ்தான அதிகாரிகள் ராஜபக்சே_வுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்சே சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது என்றும் , இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவாதம் குறித்து சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் பேச விரும்பவில்லை என்றும்  தெரிவித்தார்.

இலங்கையில் இந்திய கல்வி கண்காட்சி….!!

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில், இந்திய நாட்டின்  கல்வி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெறுகின்றது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்திய நாட்டில் கல்வி பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும் , சலுகைகள் பற்றியும்  விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், கல்வியாளர்கள் , மாணவர்கள் மற்றும் அறிஞ்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

"குவியல் குவியலாக மனித எலும்புக் கூடுகள்" அதிரவைத்த புதைக்குழி…!!

இலங்கை மன்னாரில் உள்ள புதைக்குழியில் இருந்து இதுவரை 256 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை, மன்னார் பகுதியில் உள்ள புதைக்குழியின் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இந்த அகழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதைக்குழியில் இருந்து இதுவரை 256 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாகவும், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச வெளிநாடு … Read more

யாழ்ப்பாணம் நகரில் பெட்ரோல் குண்டு வீச்சு…!!

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வாகனங்கள் எரிந்து நாசமாகின. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நேற்று நள்ளிரவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை அங்கே இருந்த வீடு ஒன்றின் மீது வீசி விட்டு சென்றது. இதனால் அந்த  வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து நாசமாகின. வீட்டின் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. இந்த சம்பவம்  குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். dinasuvadu.com 

இலங்கையில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்….தோற்கடிப்போம் அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை தோற்கடிப்போம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் இருமுறை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் குரல் மூலம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிபர் சிறிசேனா அதை நிராகரித்தார். இந்த நிலையில் ஆட்சியை கலைத்த பின்னர் புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை ரணில் கூட்டணிக்கு இல்லை என்றும் மீண்டும் நம்பிக்கை இல்லா … Read more

கிரிக்கெட் வீரர் மலிங்கா மீது பாலியல் புகார்..

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அந்த பெண்ணின் சார்பில் அவரது குற்றச்சாட்டை பாடகி சின்மயி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-  எனது பெயரை சொல்ல விரும்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மும்பையில் இருந்த போது நடந்த சம்பவம் இது. அப்போது அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த எனது தோழியை சந்திக்க சென்றேன். அங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மூலம் பிரபலமான இலங்கை … Read more

மகிந்தா ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு!

முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கூட்டுக்குழுவாக இணைந்து கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு,  ஆதரவு தெரிவித்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கேவின் தவறான பொருளாதார கொள்கைகளால், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருப்பதாக எதிர்க்கட்சி கூட்டுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை சென்ட்ரல் வங்கி பாண்டுகளை((Bonds)), 2015 மற்றும் 2016ல் வழங்கியபோது முறைகேடு நடைபெற்றதாகவும், சிங்கப்பூரைச் சேர்ந்த அர்ஜூன் மகேந்திரனை சென்ட்ரல் வங்கி கவர்னராக நியமித்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி, … Read more