கச்சத்தீவு பகுதிகளில் கடலுக்குள் பழைய பேருந்துகளை இறக்கும் இலங்கை அரசு;தமிழக மீனவர்கள் கண்டனம்…!

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக,கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளில் கடலுக்குள் பழைய பேருந்துகளை இலங்கை அரசு இறக்கி வருகிறது. இதனால்,தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசு,மீன்கள் இனப்பெருக்கத்தைப் பெருக்குவதாகக் கூறி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளுக்குள், பயன்படுத்த முடியாத பழைய பேருந்துகளை இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி,முதல் கட்டமாக ஜூன் 12ம் தேதி முதல் பழைய பேருந்துகள் கடலில் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பணியை இலங்கை கடற்படையினர் … Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் எரிப்பு – பாகிஸ்தான் பிரதமர் கண்டனத்திற்கு பணிந்த இலங்கை!

கொரோனாவால் உயிரிழந்த சிறுபான்மையினர்களையும் அவர்களின் மத சடங்கு எதிராக எரிக்கும் இலங்கை அரசை பாகிஸ்தான் பிரதமர் கண்டித்ததை அடுத்து தங்கள் முடிவை இலங்கை அரசு மாற்றிக்கொண்டுள்ளது. பொதுவாக இந்துக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மதத்தினர் எரிக்காமல் புதைப்பது தான் அவர்களின் மத வழக்கம். ஆனால் கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைப்பதால் அது நிலத்தடி நீரில் கலந்து தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் சிலர் கூறியதை அடுத்து இலங்கையில் கொரோனவால் உயிரிழக்கும் அனைவரையுமே … Read more

இலங்கை அரசு நடவடிக்கை- தமிழக மீனவர்கள் 20 பேர் விடுவிப்பு…!!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 20 பேரை அந்நாட்டு மத்திய அரசு விடுவிக்க உள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த 129 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 109 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில்,அவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் 20 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை … Read more