சமூக ஊடக குற்றங்களை தடுக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”அமைப்பு..! – டிஜிபி

சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”  அமைப்பு.  சமூக ஊடக குற்றங்களை தடுக்க  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.இருப்பினும், நாளுக்கு நாள் சமூக ஊடக குற்றங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”  அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் சைபர்கிரைம் தொழில்நுட்பம் அறிந்த சமூக ஊடக குழுக்கள் உருவாக்கபட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திர … Read more

சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக விஷ்ணுவிஷால் அறிவிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இவர் வழக்கமாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வெடுக்க விரும்புவதாக விஷ்ணு விஷால் தற்போது அறிவித்துள்ள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாழ்க்கைக்கு ஓய்வு அவசியம். எனவே, சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் … Read more

#BREAKING: இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தள சேவை

இலங்கையில் மூடப்பட்டிருந்த சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் நேற்று முன்தினம் முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கையில் … Read more

சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக பதிவு : அசாமில் 14 பேர் கைது!

சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்ட அசாமை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளம் முழுவதும் இது குறித்த செய்திகள் மற்றும் கருத்துக்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் அனைவரும் அடைக்கலம் தேடி பல நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் பலரும் ஆப்கானிஸ்தானின் மக்கள் நிலையைக் குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். … Read more

நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை – பசுபதி..!

நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை என்று நடிகர் பசுபதி தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் போன்ற எல்லா கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பவர் நடிகர் பசுபதி. தூள், விருமாண்டி, வெயில், மதுரை, சுள்ளான், கருப்பன், அசுரன், ஆகிய திரைப்படங்கள் பசுபதி நடித்த கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. அதைபோல் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 22 -ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் … Read more

தடுப்பூசி சான்றிதழை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்…மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்கள் சமூக வளைதளத்தில பகிர வேண்டாம்.பகிர்வு இணைய மோசடிக்கு வழிவகுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை. இந்தியா கொரோனாவின் 2 வது அலையில் சிக்கித் தவித்து வருகின்றது. மேலும் சில மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் மக்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்பைக் கனிசமாக குறைத்து வருகின்றனர், அதில் … Read more

இனி ஃபேஸ்புக்கில்,செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது!!

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்,”ரீட் ஃபர்ஸ்ட்”(Read First) என்ற புதிய வசதியை நேற்று சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக்கில் இனி செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது. பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி,பயனர்கள் செய்திகளை பகிர்வதற்கு முன்பு அதை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறது. அதாவது,பயனர்கள் ஒரு செய்தியின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு அதை அப்படியே மற்றவர்களுக்கு பகிர முயன்றால்,செய்தியை முழுவதும் படிக்காமல் தங்களால் பகிர முடியாது என்று திரையில்(display) … Read more

மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை.! சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது.!

சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம்  மத்திய, மாநில அரசை எச்சரித்துள்ளது. தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதி எல். நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு … Read more

பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!

பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள காசி என்பவர், சமூக வலை தளங்களில் உள்ள பெண்களை குறிவைத்து காதலிப்பது போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து, இவர் மீது 5 பெண்கள் உட்பட 6 பேர் புகார் அளித்திருந்த நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட … Read more