பாம்பு எதிரில் வந்தா பயப்படவேண்டாம்! தப்பிக்க இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க!

snake

Snake பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இருக்காது பாம்பு என்று பெயரை சொன்னால் கூட நமக்கு ஒரு விதமான பயம் வரும். அதற்கு காரணமே அது நம்மளை கடித்து விட்டது என்றால் நமது உடலில் விஷம் ஏறிவிடும் என்பதால் தான். இதன் காரணமாகவே பாம்பை நாம் நேரில் பார்த்தால் கூட பதட்டத்தில் ஓடி சென்றுவிடுவோம். ஆனால், பாம்பை பார்த்து பயப்படவே கூடாது பாம்பை நீங்கள் நேரில் பார்த்தால் அது உங்களுடைய எதிரில் இருந்தால் நீங்கள் என்ன … Read more

துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு – பயணிகள் அதிர்ச்சி

துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருந்தததால் அதிர்ச்சியடைந்த பயணிகள்.  கேரளாவின் கோழி கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். பின் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் … Read more

கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்…!

நாமக்கல்லை கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதி அருகே உள்ள, முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர், தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்துள்ளார். ரேவதி தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து, அப்பெண் அந்த பாம்பை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து, அந்த பாம்போடு அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மிட்செல் ஜான்சன் ஹோட்டல் அறைக்குள் புகுந்த பாம்பு ,இன்ஸ்டா பதிவு

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2022 போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். லக்னோவில் உள்ள தனது ஹோட்டல் அறையில் பாம்பை ஒன்று இருப்பதை கணடறிந்து தனது  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பாம்பின் படங்களைப் பகிர்ந்த அவர், “இது என்ன வகையான பாம்பு என்று யாருக்காவது தெரியுமா?” மற்றொரு பதிவில், “லக்னோவில் தங்கியிருப்பது  சுவாரஸ்யமாக இருப்பதாக” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.   View this post on Instagram … Read more

அதிர்ச்சி : புரோட்டா பார்சலில் பாம்பு தோல்…! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!

திருவனந்தபுரத்திலுள்ள நெடுமங்காடு நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா  உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோல் இருந்ததாக கண்டுபிடித்ததாக புகார். கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள நெடுமங்காடு நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா  உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோல் இருந்ததாக கண்டுபிடித்ததாக புகார் எழுந்துள்ளது.  இதனையடுத்து அந்த ஹோட்டல் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அர்ஷிதா பஷீர் கூறுகையில் … Read more

போட்டோ ஷூட்டில் பாடகி முகத்தில் கடித்த பாம்பு; வைரல் வீடியோ..!

பிரபல அமெரிக்க பாடகி Maeta கன்னத்தில் கடித்த பாம்பு இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பிரபல அமெரிக்க பாடகர் ஒரு போட்டோ ஷூட் நடத்தியபோது அவரை பாம்பு கடித்துள்ளது. பாடகியின் முகத்தில் பாம்பு கடிக்கும் வீடியோவை பாடகி Maeta தனது இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார். 21 வயதான பாடகி Maeta தனது மார்பில் மேல்  ஒரு கருப்பு நிற பாம்பை வைத்து கொண்டு இருந்தார். அப்போது அந்த  கறுப்பு பாம்பு மேல் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்த … Read more

300 பாம்புகளை பிடித்தவரின் உயிரை பறித்த பாம்பு..! நடந்தது என்ன..?

கர்நாடக மாநிலத்தில் 300 பாம்புகளை அசால்டாக பிடித்த நபர் பாம்பு கடித்தே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொடிஹாலா கிராமத்தில் பசவராஜ் பூஜாரி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கொடிஹாலா  மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எங்கு பாம்பு பிடிக்க வேண்டுமென்றாலும், பசவராஜை தான் அணுகுவர். இந்நிலையில், நேற்று முன்தினம் கொடிஹாலா கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்குள் ஐந்தரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. … Read more

சென்னையில் மழை பாதிப்பு : வீடுகளுக்குள் பிடிபட்ட 85 பாம்புகள் – வனத்துறை

சென்னையில் இதுவரை வீடுகளுக்குள் புகுந்த 85 பாம்புகள் பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more

சென்னை மக்களுக்கு ஓர் அறிவிப்பு…! பாம்பு பிடிப்பவர்கள் எண்களை வெளியிட்டது மாநகராட்சி…!

சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.  சென்னை : தமிழகம் முழுவதும்  கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.  இந்நிலையில், ஒருவார காலமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் … Read more

பாம்பிற்கு ராக்கி கட்டிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…!

பீகாரில் பாம்பிற்கு ராக்கி கட்டிய இளைஞர் உயிரிழப்பு. பொதுவாக ரக்ஷா பந்தன் அன்று, சகோதரிகள் அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி காட்டுவர். ஆனால், பீகாரில் வினோதமான முறையில், பாம்புக்கு ராக்கி காட்டியுள்ளனர். பீகாரில்,  சரண் என்ற இளைஞன் அவர் வைத்திருந்த 2 பாம்புகளுக்கு அவரது சகோதரிகளை வைத்து ராக்கி கட்ட  வைத்துள்ளார். அப்போது அந்த பாம்பில் ஒன்று, எதிர்பாராதவிதமாக சரணின் காலில் கடித்துள்ளது. இதனையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்துள்ளனர். ஆனால், சரண் சிகிச்சை பலனின்றி … Read more