நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்…   

Kotak Mahindra Bank

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை தொடங்க அறிவித்த வங்கி கோடாக் மஹிந்திரா வங்கி. மேலும், ஆன்லைன் மூலமாகவே புதிய வங்கி கணக்குகளை தொடங்கலாம் என்ற வசதியையும் அறிமுகப்படுத்தி அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஆன்லைன் மூலமாகவே கிரெடிட் கார்டு வழங்குவது உள்ளிட்ட சேவைகளை அதிகப்படுத்தியது கோடாக் மஹிந்திரா வங்கி. 811 என்ற மொபைல் நம்பருக்கு கால் … Read more

கோடாக் மஹிந்திரா வங்கி மீது நடவடிக்கை.. இவற்றுக்கெல்லாம் தடை விதித்த ஆர்பிஐ!

Kotak Mahindra Bank

RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக் மகிந்திரா வங்கி நாடு முழுவதும் பல்வேறு கிளைகளை தொடங்கி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் முதல் முறையாக கோடாக் மஹிந்திரா வங்கி தான் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு என்ற நடைமுறையை அறிமுகம் செய்தது. ஆன்லைன் மூலம் கணக்கு தொடங்குதல், கேஒய்சி பயன்பாடு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வாயிலாக … Read more

ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ் .! ஜிபே, போன்பே ஆப்ஸ்க்கு அடித்த லக் ..!

RBI : தற்போது நிதியாண்டு நிறைவு பெற்று அடுத்த நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த தொடங்கியுள்ள நிதியாண்டில் உபயோகம் உள்ள சில புதிய விதிகளை அமல்படுத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) தயாராக உள்ளது. இதில் முதலாவதாக, பிபிஐ வாலெட் விதிகளை (PPI Wallets Rules) முதலில் அறிமுகம் செய்துள்ளனர். இப்பொது வந்துள்ள இந்த விதிகள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற மூன்றாம் தர ஆப்களில் இருந்து பிபிஐ … Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்பிஐ ஆளுநர்

Shaktikanta Das

Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%-ஆகவே தொடரும். நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் … Read more

2,000 ரூபாய் நோட்டு தொடர்பில் ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

RBI: 2000 ரூபாய் நோட்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதியன்று மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி தகவல் 2000 ரூபாய் நோட்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதியன்று மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. மார்ச் 31, ஆண்டின் முழு வருட கணக்கு முடிவு நாளாக இருப்பதால் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் ஏப்ரல் 1 ஆம் … Read more

இன்றுடன் சேவையை முடித்து கொள்கிறது PayTM.. இருந்தும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்…

Paytm

PayTM : ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக இன்றுடன் நிறுத்த கொள்கிறது. அதாவது, கடந்த பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் உத்தரவிடப்பட்ட நிலையில், பின்னர் இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை இன்று முடித்து கொள்கிறது. Read More – ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! … Read more

சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!!

Sai Pallavi

Sai Pallavi : சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அப்படி தான் நடிகை சாய்பல்லவி குறித்து வதந்தியான ஒரு தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், கார்கி திரைப்படம் வெளியான சமயத்தில் சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப்ரோமோஷனுக்காக கடந்த 2022, ஜூலை 13ம் தேதி கலந்துகொண்டார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! அப்போது … Read more

PAYTM செயல்பாடுகளை நிறுத்த காலக்கெடு நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில் காலக்கெடுவானது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Paytm நிறுவனத்தின் kyc குறைபாடுகள் மற்றும் தொடர் விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தததன் காரணமாக அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வாடிக்கையாளர்களிடம் வாலட்களில் பணம் பெறுவதோ, என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ, வாடிக்கையாளர் சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் … Read more

ரிசர்வ் வங்கி – நேபாள ராஸ்ட்ரா வங்கி இடையே UPI-NPI இணைப்புக்கு ஒப்பந்தம்

இந்தியா மற்றும் நேபாளத்தின் மத்திய வங்கிகள், இரு நாடுகளின் விரைவான கட்டண முறைகளை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேபாள ராஸ்ட்ரா வங்கி (NRB) இணைந்து, UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒருங்கிணைப்பானது இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இடையேயான இணைப்புக்கான ஒப்பந்தம் தொடர்பான முழுமையான விதிமுறைகள் தொடர்பில் கையெழுத்தான பிறகு, UPI … Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

shaktikanta das

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் 6-வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது … Read more