நளினி உள்ளிட்ட 5 பேர் விடுதலை – நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு விடுதலைக்கோரும் 5 பேரின் வழக்கு மீது நாளை விசாரணை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த பதில் மனுவில் ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றமே விடுவித்ததை போலவே, நளினி, ரவிச்சந்திரன் விடுதலை … Read more

#BREAKING: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரம் – நீதிமன்றமே முடிவெடுக்கலாம்!

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்கக்கோரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை கைதிகளாக நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றமே விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் எனவும் பதில் மனுவில் தமிழக அரசு … Read more

#BREAKING: நளினி வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

முன்கூட்டியே விடுதலை?.. நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு 26-ல் விசாரணை!

முன்கூட்டியே விடுவிக்கக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு 26-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்தனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபையிலும் … Read more

#BREAKING: நளினி, ரவிச்சந்திரனின் மனுக்கள் தள்ளுபடி!

தங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், தங்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தை போல் சென்னை உயர் நீதிமன்றம் … Read more

#Breaking:ஆயுள் கைதிகள் விடுதலை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை:ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிச்சந்திரன் சிறைதண்டனை பெற்று வரும் … Read more

நாளை பரோலில் வெளிவருகிறார் ரவிச்சந்திரன் – சிறைத்துறை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளிவருகிறார் என்று சிறைத்துறை அறிவிப்பு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என முதல்வரிடம் ரவிச்சந்திரன் தாய் தரப்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோலில் வெளியே செல்ல தமிழக சிறைத்துறை உத்தரவை … Read more

7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிசந்திரன், ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இதனையடுத்து, 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என சிறையில் இருக்கும் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக தாங்கள் விடுதலை … Read more

#BREAKING : ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்..? – உயர்நீதிமன்ற கிளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி  27 ஆண்டுகளாக எனது மகன் ரவிசந்திரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., ரூ.5000 நிவாரண நிதி வழங்கிய ரவிச்சந்திரன்..!

சிறையில் சம்பாதித்த பணத்தில் இருந்து ரூ.5000-ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் முதலமைச்சர்  நிவாரண நிதிக்கு ரூபாய் 5000 வழங்கியுள்ளார். சிறையில் தான் செய்த வேலை கிடைத்த ஊதியத்தை நிவாரண நிதிக்கு ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார். ஏற்கனவே ஹார்வர்டு  தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.20,000, கஜா புயலுக்கு ரூ.5000 ரவிச்சந்திரன் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.