ராமேஸ்வரத்தில் நாளை மீன்பிடிக்க அனுமதியில்லை – மீன்வளத்துறை

ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன்பிடி அனுமதிசீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு. ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன் பிடிக்க அனுமதியில்லை என்று தமிழக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. நாளை மீன்பிடி அனுமதிசீட்டு வழங்கப்படாது. கடலில் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மீன்பிடிக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

#Breaking:தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் … Read more

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று 80 பேர் கச்சத்தீவு பயணம்-இரவு பேச்சுவார்த்தை!

கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 80 பக்தர்கள் இன்று கச்சத்தீவு செல்கின்றனர்.3 விசைப்படகுகள்,ஒரு நாட்டுப் படகில் இன்று காலை 9 மணிக்கு 80 பேரும் உரிய பாதுகாப்புடன் கச்சத்தீவு பயணம் மேற்கொள்கின்றனர். கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதன்படி, அந்தோணியார் உருவம் பொறித்த கொடியேற்றப்படவுள்ளது. அதன் பின்னர்,சிலுவைப்பாதை திருப்பலை மற்றும் அந்தோணியார் தேர்பவனி நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து,நாளை காலை 7 மணிக்கு திருப்பலி … Read more

இன்று உண்ணாவிரதப் போராட்டம் – மீனவர்கள் சங்கம் அறிவிப்பு!

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து … Read more

#Breaking:நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம்…ஜனவரி 1-ல் ரயில் மறியல் – மீனவர்கள் சங்கம் அறிவிப்பு!

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 … Read more

ராமேஸ்வரம்:மண்டபம் அருகே கடலில் நிகழ்ந்த ஓர் அரிய நிகழ்வு..!

தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகே கடல் மீது சூறாவளி தோன்றிய ஒரு அரிய நிகழ்வு தென்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகே நேற்று தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் சூறாவளி தோன்றியதைக் கண்டனர். இதனை,மீனவர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து,ராமநாதபுரம் மீன்வளத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில்: “இந்த நிகழ்வு சூறாவளி நீர்நிலைகள் என்று அழைக்கப்படுகிறது.அவை காற்றின் பத்திகளை(rotating columns of air) தண்ணீருக்கு … Read more

இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு அனுமதி ரத்து..!

ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் சிலர் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரட்டை மடி வலைகளால் மீன் வளம் குறையும் அபாயம் இருப்பதால் இதனை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் அனைத்து விசைப்படகு … Read more

9 மாதத்திற்கு பிறகு திருச்சி – ராமேஸ்வரம் இடையே மீண்டும் சிறப்பு ரயில் சேவை!

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் திருச்சி ராமேஸ்வரம் இடையே நேற்று முதல் இயக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. பேருந்துகள் இயக்கம் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ரயில் சேவைகளுக்கும் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. தற்பொழுது 9 மாதத்திற்கு … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்.!

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கல் மற்றும் பாட்டில்களை வீசி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பினர். அதனையடுத்து, இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இலங்கை கடற்படையினர் நடத்தியதாக்குதலில் சில மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்த … Read more

பிரான்சில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா!

பிரான்சில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையின், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் … Read more