புதிய கல்வி கொள்கை – மே 17ல் மத்திய அரசு ஆலோசனை.!

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ல் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்வதாக தகவல். மத்திய அரசு, நாட்டில் கல்வியை மேம்படுத்துவதாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெயிட்டிருந்தது. இந்த நிலையில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ல் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த … Read more

ஜூலை 3-ம் தேதி JEE அட்வான்ஸ் தேர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு.!

நாடு முழுவதும் JEE அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு … Read more

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜன.7 வெளியீடு.!

ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு … Read more

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு – நாளை மாலை அறிவிப்பு – ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு தினங்களுக்கு முன்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி நாளை சிபிஎஸ்இ தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து … Read more

5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்  குறித்து பயிற்சி – ரமேஷ் பொக்ரியால்

பொதுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று , மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் ,அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ,மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை … Read more

ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் – அமைச்சர்

ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முதல் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுகள் பி.23- பிப்.26-ல் நடத்தப்படும் என்றும் அடுத்தாண்டு பிப்., மார்ச், ஏப்ரல், மே என 4 கட்டங்களாக நடைபெறும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முதல் … Read more

எதிர்ப்பையும் மீறி இறுதி ஆண்டு தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது – ரமேஷ் போக்ரியால்

எதிர்ப்பையும் மீறி இறுதி ஆண்டு தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இது குறித்து, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று கூறியதாவது, எதிர்ப்பை மீறி, இறுதி ஆண்டு கல்லூரி தேர்வுகள் நாட்டில் வெற்றிகரமாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடத்தப்பட்டது. காணொளி மூலம் ஒரு நிகழ்வில் பேசிய அவர், தொற்றுநோய்களின் மத்தியில் ஆன்லைன் தளங்களுக்கு மாறிய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினார். மேலும் அவர் கூறுகையில், இறுதி ஆண்டு … Read more

#Breaking: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது!

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடைபெற்ற நீட் தேர்வுகளின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள். மேலும், நீட் தேர்வு முடிவுகளை அக்.16 ஆம் தேதி வெளியிட வேண்டுமென தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய … Read more

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் – மத்திய அரசுக்கு கே.பி.அன்பழகன் கடிதம்.!

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என மத்திய கல்வி அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இருமொழி கொள்கையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால் அதனை தொடர முடிவு செய்துள்ளதாக எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் … Read more

பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக ரூ.6,200 கோடி.! ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு .!

வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.6,200 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமலில்உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி,  நுழைவுத் தேர்வுகள், உள்ளிட்ட அனைத்து ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஊரடங்கு முடிந்த உடன் வரும் கல்வி ஆண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் … Read more