Winter Session: மாநிலங்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே நிறைவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. கடந்த 7ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா கால அட்டவணைக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராகப் பதவியேற்ற முதல் முழு அமர்வு இதுவாகும். ஜக்தீப் தன்கர் கூறுகையில், கிறிஸ்மஸ், பொங்கல், … Read more

குருவிக்காரர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

எஸ்டி பட்டியலில் குருவிக்காரர், நரிக்குறவர் பிரிவினரை சேர்க்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. குருவிக்காரர், நரிக்குறவர் சமுதாயத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கடந்த 15-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. எனவே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய குருவிக்காரர், நரிக்குறவர் மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாகிய பின்னர் தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரதட்சணை கொடுமை இறப்புகள்.. வெளியான அதிர்ச்சி சர்வே.! எந்த மாநிலம் முதலிடத்தில்.?

வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தகவல். 2017 முதல் 2021 வரை இந்தியாவில் 35,493 வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 35,493-ஆக பதிவாகியுள்ளது என்று நாடாளுமன்ற  மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில், வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பீகாரில் 5,354 பேர், மத்தியப் பிரதேசத்தில் 2,859 பேர், மேற்கு வங்கத்தில் 2,389 பேர் மற்றும் … Read more

தமிழகத்திற்கான ரூ.19,053 கோடியை விடுவிக்க வேண்டும் – திமுக எம்பி வில்சன்

சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டியதை நிறுத்த வைப்பதன் மூலம் ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை முடக்க முடியாது என எம்பி வில்சன் பேச்சு. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிலுவை வைத்துள்ள ரூ.19,053 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என பி.விலாசம் எம்பி வலியுறுத்தியுள்ளார். 2020 முதல் 2022-23 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மட்டுமே ரூ.10,879 கோடி பாக்கி உள்ளது. உடனடியாக அதனை விடுவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு … Read more

#BREAKING: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மற்றும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. இந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவை தலைவர் … Read more

இதுவே முதல் முறை; எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் 19 ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா அறிவித்த நிலையில், இன்று மாநிலங்களவையில் 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணவீக்கம் தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், … Read more

#Breaking:5ஜி அலைக்கற்றை ஏலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுதப்படவுள்ளது எனவும், இதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது எனவும்,மேலும்,வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி  அண்மையில் அறிவித்திருந்தார். பிரதமரை தொடர்ந்து,இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில்,பொது … Read more

#JustNow: மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வாகிறார். தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10ல் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், மாநிலங்களவைக்கு மீண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வாகிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மாநிலங்களவை … Read more

#Breaking:மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் யார்?-முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் … Read more

#BREAKING: ஜூன் 10 ல் மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன்10ல் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன்10ல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, … Read more