மேயர் பதவியில் இருந்து பாஜக கவுன்சிலர் டிஸ்மிஸ் !

ஜெய்ப்பூர் மேயர் பதவியில் இருந்து பாஜக கவுன்சிலரை ராஜஸ்தான் அரசு டிஸ்மிஸ் செய்தது. முன்னாள் கமிஷனர் யக்யா மித்ரா சிங் தியோவை தாக்கியதாக வழக்கில் விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயரான பாஜக கவுன்சிலர் சோமியா குர்ஜரை ராஜஸ்தான் அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. மேலும் குர்ஜார் ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை மேயர் புனித் கர்னாவத், அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக கடுமையான … Read more

வயதான தந்தையை தெருவில் வைத்து அடித்த மகன்..வைரலாகும் வீடியோ!!

ராஜஸ்தானில் வயதான தந்தையிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஒருவர் வயதான தந்தை தெருவில் வைத்து அடித்துள்ளார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் தனது தந்தையுடன் வீட்டு விஷயங்களில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த வீடியோவில்,வயதான ஒரு நபரை ஒரு இளைஞர் தெருக்களில் வைத்து தாக்குவது … Read more

#JustNow: ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து கொலை.. வங்கி ஊழியரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்!

குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எலாகி டெஹாட்டி (Ellaqui Dehati Bank) வங்கியின் ஊழியர் விஜய் குமார் வங்கி வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கவாதிகள் தாக்குதலை தொடர்ந்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி ஊழியர் விஜய் குமார் வழியிலேயே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. … Read more

விரட்டி விரட்டி வெளுத்த மனைவி.. நீதிமன்றத்தில் கதறிய கணவர்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். இவர், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமன் யாதவ். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். ஆரம்பத்தில் அன்பாக இருந்த மனைவி சுமன் கடந்த ஒரு வருடமாகவே சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட்டு தனது கணவர் அஜித்தை … Read more

குற்றவாளி கைது.. ஆதாரத்துடன் தப்பி ஓடிய குரங்கு.. ராஜஸ்தானில் அரங்கேறிய வினோதம்!

ராஜஸ்தானில் கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை குரங்கு திருடி சென்ற வினோதம் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக, ஒரு குற்றத்தைச் செய்து பின்னர் ஆதாரங்களை அழிப்பவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் ஒரு மிருகம் மனிதன் செய்த குற்றத்திற்கான ஆதாரத்தை அழித்துவிட்டால் என்ன செய்வது. அப்படியொரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் ஒரு குரங்கு கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் தப்பி ஓடியுள்ளது. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அந்த ஆதாரத்தில் கொலை ஆயுதம் … Read more

ஆபாச வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் – மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த நபர் ..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் எனும் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும் என கூறி அவரது உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மனைவியை பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ள நபர், இதை தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் என மனைவியை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவியை பலாத்காரம் செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதால் மனைவி வரதட்சணை பணத்தை … Read more

ராஜஸ்தான் : 3 வயது மகனை அடித்து கொன்ற மனைவி கைது …!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரான் என்னும் மாவட்டத்தில் உள்ள சிப்பாபரோட் நகரில் வசித்து வரக்கூடிய 26 வயது பெண் ஒருவர் தனது 3 வயது மகனை அடித்து கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். காயத்ரி ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் மீது அவரது கணவர் அணில் ஜாதவ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி திங்கள் கிழமை வேலை முடிந்து வீடு திரும்பிய போது தனது மகன் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள … Read more

ராஜஸ்தானின் ராஜ்சமந்தில் பேருந்து விபத்து – 3 பேர் பலி ; 24 பேர் காயம்!

ராஜஸ்தானிலுள்ள ராஜ்சமந்த் எனும் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது திடீரென்று பேருந்து பாறை ஒன்றின் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்தப் பேருந்து உதய்ப்பூரிலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்து ஓட்டுநர் தூங்கிக்கொண்டிருந்த போது ஓட்டியதால், பாறை மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு … Read more

#JustNow: இனி மாடுகள் வளர்க்க லைசன்ஸ் கட்டாயம் – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

ராஜஸ்தானில் இனி மாடுகள் வளர்க்க லைசன்ஸ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமை உள்ளிட்ட மாடுகளை வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் மற்றும் 100 சதுர இடம்  கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கால்நடைகள் வழிதவறி வருவது கண்டறியப்பட்டால், உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாமல் ஒரு வீட்டில் ஒரு பசு மற்றும் கன்று மட்டுமே வைக்க அனுமதிக்கப்படும் என்றும் மேலும் … Read more

7 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை ..!

அடுத்த 5 நாட்களுக்கு 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 முதல் 15 ஆம் தேதி வரை ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஏழு மாநிலங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் ஏப்ரல் 12 முதல் 15 வரை … Read more