புதிய மதுபான கொள்கை.! டெல்லி மற்றும் பஞ்சாபில் பல்வேறு இடஙக்ளில் அமலாக்கத்துறையினர் ரெய்டு.!

புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் டெல்லி மற்றும் பஞ்சாபில் 35 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.  டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, சிபிஐ தரப்பில் ஏற்கனவே அவருக்கு நெருக்கமான இடங்களில் சோதனை நடைபெற்று, மணீஷ் சிசோடியா உட்பட … Read more

பஞ்சாப் அரசவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! முதல்வர் பக்வந்த் மான் வெற்றி.!

நேற்று ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் சட்டமன்றத்தில் முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான அரசு தங்களது 92 எம்.எல்.ஏக்கள் மூலம் தங்கள் பெரும்பான்மையினை நிரூபித்தார்.   பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. பக்வந்த் மான் அம்மாநில முதல்வர் பதவியில் இருக்கிறார். அம்மாநிலத்தில், பாஜக ‘ஆபரேஷன் தாமரை’ எனும் பெயரில் எம்.எல்.ஏக்களை விலை பேசுகிறது. ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆம் ஆத்மி முன்வைத்தது. மேலும், இது குறித்து, பஞ்சாப் சட்டமன்றத்தில் நம்பிக்கை … Read more

வகுப்பறையில் குடிபோதையில் பாடி ஆடும் பேராசிரியர்.! வைரலாகும் வீடியோ..

பஞ்சாப் பேராசிரியர் குடிபோதையில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வரலானது. குருநானக் தேவ் பல்கலைக்கழக கணித பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறையில் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும் ரவீந்தர் குமார் வகுப்பறையில், ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு பஞ்சாபி மொழியில் தனது மாணவர்களுடன் பேசுவதும், பின் பாட்டு பாடி நடனமாடுவதும் பதிவாகியுள்ளது. மேலும் அதில் மாணவர்கள் பேராசிரியரை உற்ச்சாகப்படுத்தும் சத்தமும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ரஜ்னி … Read more

#BREAKING: பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர்!

பஞ்சாப் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர் சுனில் ஜாகர் மற்றும் பாஜக பஞ்சாப் தலைவர் அஸ்வனி சர்மா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸை-யும் (பிஎல்சி) பாஜகவுடன் இணைத்துள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங். நாட்டின் சரியான … Read more

‘ஆபரேஷன் லோட்டஸ்’ – செப். 22 பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!

பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு மீது செப். 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியில் ஆளும் பாஜக, ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் எம்எல்ஏக்களை பேரம் பேசுவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். பாஜக இந்தக் … Read more

சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு!

சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை என அறிவிப்பு. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறி, போராட்டம் நடத்தினர். மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, வீடியோக்களை பகிர்ந்ததாகக் கூறப்படும் 23 வயது சிம்லா இளைஞன் உள்ளிட்ட … Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்! வதந்தியை பரப்பிய மாணவர்கள்..

அமிர்தசரஸ் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியை பரப்பிய 9ஆம் வகுப்பு 3 மாணவர்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வதந்தியை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர். வதந்திகள் கண்டுபிடிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வதந்தி பரவிய நிலையில், அதே பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான மற்றொரு வதந்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

#viral: 50 அடி உயரத்தில் இருந்து 50 பேருடன் கீழே விழுந்த ராட்டினம்

பஞ்சாபில் 50 பேருடன் கார்னிவல் ராட்டினம் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது, 15 பேர் காயம். பஞ்சாபின் மொஹாலியில் நேற்று(செப் 4) நடந்த கண்காட்சியின் போது ஏறக்குறைய 50 பேருடன் இருந்த ராட்டினம் உடைந்து 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் குறைந்தது 15 பேர், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த ராட்டினத்தின் … Read more

1.45 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது

பஞ்சாபில் 1.45 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம்  பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பஞ்சாபின் கலால் துறையினர் வெள்ளிக்கிழமை(செப் 2) லூதியானாவில் ஆற்றங்கரைக்கு வெளியே ஒரு இடத்தில் கள்ளச்சாராயம்  தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1.45 லட்சம் லிட்டர் லஹான் என்ற மூலப்பொருளை மீட்டு அழித்தனர். மாநில அமைச்சரான ஹர்பால் சிங் சீமா கூறுகையில், “மது மாஃபியாவின் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க மாட்டார்கள்” என்று கூறினார். சட்டவிரோதமாக யாராவது கள்ள சாராயம் தயாரிக்கிறார்களா என … Read more

“ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஒப்புதல் – பஞ்சாப் முதல்வர் ட்வீட்!

ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை பஞ்சாபியர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவு மிச்சமாகும் என … Read more