வாக்குக்கு பணம்… நான் தேர்தலை புறக்கணிக்கிறேன்.. கொந்தளித்த அதிமுக வேட்பாளர்!

Tamilventhan

Election2024: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்படுவதாக புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா … Read more

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியவர் தான் பிரதமர் மோடி… கார்கே தேர்தல் பரப்புரை!

mallikarjun kharge

Election2024: மத்திய பாஜக சில மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சி அமைகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணியில் காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் பரபரப்பராக நடந்து வருகிறது. சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தவகையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சி … Read more

வெற்றி பெறுவோம் என நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை.. காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி.!

V Vaithiyalingam - Puducherry Minister Namachivayam

Election2024 : புதுச்சேரியில் வெற்றி பெறுவோம் என பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியியலிங்கம் கூறியுள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2019இல் வெற்றி பெற்ற வெ.வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். புதுச்சேரி மண்ணாடிபட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், புதுச்சேரி அமைச்சராகவும் உள்ள நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யாமல் மக்களவைக்கு போட்டியிடுகிறார். இது குறித்து காங்கிரஸ் வேட்பாளரும், … Read more

புதுச்சேரியில் சுவர் இடிந்து கோர விபத்து! உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Puducherry: புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும் போது சுவர் இடிந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து ஏற்பட்ட கோர விபத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மரப்பாலம் மின்துறை அலுவலகம் பின்புறம் வசந்தம் நகர் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் வாயக்கால் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள வாய்க்கால் … Read more

நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை! கைதான இருவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

Puducherry: இந்தியாவையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த இரண்டு கொடூரர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More – டிஜிபி உட்பட 6 மாநில உள்துறை செயலாளர்களை பதவி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்! குறித்த சிறுமி பாலியல் … Read more

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தமிழிசை.! ஆளுநர் பதவிகளுக்கு குட்’பை’.!

Tamilisai Soudarajan

Tamilisai Soundararajan : தமிழக பாஜக மாநில தலைவராக முன்னர் பொறுப்பில் இருந்தவர் தமிழிசை சௌந்தராஜன். 2019 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக எம்பி கனிமொழியை எதிர்த்து களமிறங்கினார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர்,  பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினார். Read More – தயவு செய்து கிழே இறங்குங்கள்.. தொண்டர்களிடம் கெஞ்சிய பிரதமர் மோடி.! பின்னர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா மாநில ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டு … Read more

நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி தற்கொலை நாடகம்

Puducherry Murder: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவரில், ஒரு குற்றவாளி சிறைக்குள் தற்கொலை நாடகம் ஆடி போலீசாரை தொந்தரவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விவேகானந்தன் (57) கருணாஸ் (19) என்ற இருவர் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Read More – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் பேங்கிற்கு ‘செக்’ … Read more

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.!

Puducherry Bundh

Puducherry – புதுச்சேரியில், கடந்த 2ஆம் தேதி காணாமல் போன 9 வயது சிறுமி , 4 நாட்கள் கழித்து சிறுமியின் வீட்டருகே ஒரு கால்வாயில் கைகால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம், புதுச்சேரி முழுவதும்  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது . Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு! இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிசிடிவி … Read more

நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை..! கைதான இருவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல்

Puducherry: புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் கைதான இரண்டு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 5ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியின் சடலம் அவளது வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சோலைநகர் பகுதியை … Read more

புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.!

puthucherry girl

Puducherry : புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் ஊர்வலகமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும், 5 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு … Read more