வெளியான தேசிய குடிமக்கள் பதிவேடு!19 லட்சம் பேர் நீக்கம்

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி இந்த பதிவேடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அந்த வகையில்  3,11,21,004  பேர் இடம்பெற்றுள்ளனர்.அதாவது இவர்களின்  குடியுரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 19,06,657 பேரின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்டைநாடுகளில் இருந்து  குடியேறியவர்களை அடையாளம் காணும் விதத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக அசாமிற்கு அருகே வங்கதேசம்,நேபாளம் உள்ளிட்ட நாடுகள் உள்ளது.இந்த பதிவேடு  வெளியானதை தொடர்ந்து  அசாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்த உள்ளதாவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.