நடிகைகள் படுக்க சம்மதிக்கிறார்களா? பெண் நடன இயக்குனருக்கு நடிகை ஸ்ரீரெட்டி பதிலடி ..!

நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் பிரபல இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கை என்பது இந்தி பட உலகில் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது. இந்தி பட உலகில் நடிகைகள் ஒப்புதலுடன்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நடிகைகளுக்கு … Read more

நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என பிரபல நடன இயக்குநர் குற்றச்சாட்டு ..!

நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் பிரபல இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கை என்பது இந்தி பட உலகில் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது. இந்தி பட உலகில் நடிகைகள் ஒப்புதலுடன்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நடிகைகளுக்கு … Read more

திருச்சியில் பயங்கரம் ! வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிய பெண் வெட்டிக்கொலை தடுக்க முயன்ற கணவருக்கு அருவாள் வெட்டு ..!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரகம்பி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 65). விவசாயி. இவருக்கு ரமேஷ் (35), ராஜ்குமார்(28) என 2 மகன்கள் உள்ளனர். இதில் ரமேசுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்பவருடன் திருமணமானது. ரமேஷ் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக வீடு கட்டி, மனைவியுடன் குடியிருந்தார். ராஜ்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. அவர் மனைவி மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் … Read more

டைரக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய சதுரங்க வேட்டைநாயகிக்கு திடீர் திருமணம்..!

கேரளாவை சேர்ந்தவர் நடிகை இஷாரா. இவர் விதார்த்துடன் ‘வெண்மேகம்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பப்பாளி படத்தில் நடித்தார். நட்ராஜ் ஜோடியாக நடித்த சதுரங்க வேட்டை படம் வெற்றிகரமாக ஓடி அவரை பிரபலப்படுத்தியது. எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்தபோது இயக்குனர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படத்தின் காட்சிகளை இயக்குனர் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாகவும் தொட்டு தொட்டு பேசியதாகவும் குற்றம் சாட்டினார். அதன்பிறகு இஷாராவுக்கு பட … Read more

அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் 28-ந்தேதி மாலை மதுரைக்கு புறப்படு!

அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இதையொட்டி அழகர்கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மாலை முதல் திருவிழா தொடங்குகிறது. அன்று மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் கோவிலுக்குள் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாளும் இதே நிகழ்ச்சி நடைபெற்று, 28-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்படுகிறார். தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட … Read more

லஞ்சம் வாங்கிய ஜெயிலர் அதிரடி மாற்றம் ..!

புழல் மத்திய சிறையில் ஜெயிலராக இருந்த ஜெயராமன், கைதியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆதாரத்துடன் சிக்கிய பிறகும் கூட நடவடிக்கைக்கு உள்ளாகாமல் தப்பி வந்த நிலையில் மதுரை மத்திய சிறைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையின், விசாரணைக் கைதிகளுக்கான பிரிவின் ஜெயிலராக இருந்தவர் ஜெயராமன். கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சிறை வளாகத்திற்கு அருகே ரசாயனம் தடவிய 40 … Read more

தமிழ் திரையுலகில் கால் வைக்க அஞ்சும் பிற மொழி பிரபல நடிகர்கள் ..!

தமிழில் கதாநாயகர்கள் குறைவு. விரல் விட்டு எண்ணும் நடிகர்களுக்குத்தான் மார்க்கெட் உள்ளது. அவர்களுடைய படங்கள்தான் வசூலும் பார்க்கின்றன. புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆண்டுக்கு 300 படங்களுக்கு மேல் ரிலீசாகும் நிலையில் மார்க்கெட் இருக்கும் கதாநாயகர்களை கணக்கெடுத்தால் 10 பேர் கூட தேறுவது இல்லை. கதை பஞ்சம், கதைகளை தேர்வு செய்வதில் கதாநாயகர்களுக்கு இருக்கும் தெளிவற்ற தன்மை ஆகியவைதான் படங்கள் தோல்விக்கு காரணம் என்கின்றனர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே நல்ல கதைகளை தேர்வு செய்கிறார்கள் … Read more

நாகர்கோவிலில் ஷோரூம் கதவை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை..!

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 32). இவர் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் பிரபல செல்போன் நிறுவனம் ஒன்றின் செல்போன்கள் விற்பனை செய்யும் ஷோரூமை நடத்தி வருகிறார். அதில் ரூ.6500 முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விலைகொண்ட ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு சுதாகர் வழக்கம் போல் ஷோரூமை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் திறக்க வந்தபோது ஷோரூமின் … Read more

நாகர்கோவிலில் மாணவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது விழாவில் கலெக்டர் வேண்டுகோள்..!

தமிழகம் முழுவதும் கடந்த 23-ந் தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கினார். நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், தமிழ்நாடு … Read more

பிரபல நடிகரின் படப்பிடிப்பில் பயங்கர குண்டு வெடிப்பு- பதற்றத்தில் படக்குழு!

பாலிவுட் சினிமாவை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சை பட்டவர் நடிகர் அக்ஷய் குமார். தற்போது இவர் ரஜினியுடன் 2.0 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கேசரி என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்து வருகிறது. அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது, படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் … Read more