திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை அழித்திருப்பார்கள் – அமைச்சர் பொன்முடி

விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ … Read more

விரைவில் அமலுக்கு வருகிறது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் பொன்முடி

தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையை எதற்காக எதிர்க்கிறோம் என மத்திய கல்வி அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளோம். கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழக அரசு சார்பில் புதிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகவுள்ளது என தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், … Read more

#Justnow:மாநிலக் கல்விக் கொள்கை – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில்,சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி,தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும்.உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரும் இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை … Read more

#JustNow: கல்வி அமைச்சர்கள் மாநாடு – தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் புறக்கணிப்பு. குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. NEP தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் … Read more

புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும் – ஆளுநர்

நாடு அனைத்துத் துறைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் பேச்சு. நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 31 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெதிஷ் குமார், அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர். உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடக்கி வைத்த பின் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை … Read more

நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்விமுறை தான் நமது நாட்டின் எதிர்காலம் – பிரதமர் மோடி

கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும் என்று புதிய கல்வி கொள்கை அமல்படுத்தி ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார். அவரது உரையில், புதிய கல்விக்கொள்கை மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். எந்த இடத்துக்கு போனாலும் இந்த கால இளைஞர்கள் உச்சத்தை தொடும் வகையில் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. … Read more

புதிய கல்வி கொள்கை – மே 17ல் மத்திய அரசு ஆலோசனை.!

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ல் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்வதாக தகவல். மத்திய அரசு, நாட்டில் கல்வியை மேம்படுத்துவதாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெயிட்டிருந்தது. இந்த நிலையில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ல் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த … Read more

இந்தியாவை வல்லரசாக மாற்றும் புதிய கல்வி கொள்கை – வெங்கையா நாயுடு

புதிய கல்வி கொள்கை இந்தியாவை வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அகர்த்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 13 வது மாநாட்டில் உரையாற்றிய வெங்கையா நாயுடு, புதிய கல்விக் கொள்கை (என்இபி) உலகளவில் இந்தியாவை  வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கல்வித்துறையில் நாடு மீண்டும் உலகளாவிய ஆசிரியராக மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று துணைத் குடியரசுதலைவர் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார். எங்கள் கல்வி நடைமுறை, … Read more

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைப்பு.!

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக  உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக  ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை வழங்க 2 குழு அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் அடைப்படையில் தற்போது  உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது. இந்த குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி நெல்லை மனோமணியம் சுந்தரனார் … Read more

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது – முதல்வர்

 புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு சந்தித்து பேசினார். அப்போது நெல்லை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் கூடுதலாக 100 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அப்போது அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.