இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!

Chennai Metro 2nd Phase

Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. Read More – அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.!  119 மெட்ரோ நிலையங்கள் … Read more

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்

Metro: இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக … Read more

தீபாவளி பண்டிகை: நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ சேவை இயக்கம்!

Metro Train

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மெட்ரோ இரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, 9,10,11 ஆகிய தேதிகளில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட்டிக்கப்பட்ட நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி … Read more

மாண்டஸ் புயலால் ரூ.3.45 கோடிக்கு சேதம் – மெட்ரோ நிர்வாகம்

மாண்டஸ் புயல் தாக்காதால், ரூ.3.45 கோடி பொருட்கள் சேதமானதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்புகள் இல்லாவிட்டாலும், சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் தாக்காதால், ரூ.3.45 கோடி பொருட்கள் சேதமானதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அதன்படி கோயம்பேடு, ஈக்காட்டுத்தாக்கல், சின்னமலை, கிண்டி ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி சிலைக்கு நோ.! உழைப்பாளர் சிலைக்கு ஓகே.? குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கான அனுமதி.?

சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று … Read more

சென்னை மெட்ரோவில் பயணித்த மத்திய அமைச்சர்.! தமிழக அரசின் கோரிக்கை பற்றி புதிய தகவல்.!

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார்.  மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். இங்கு வடபழனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மெட்ரோ ரயிலில் பயணித்து சக பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், மெட்ரோ பணிகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதி கேட்டுள்ளது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அதற்கடுத்ததாக சென்னை … Read more

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள்…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பதுண்டு. பேருந்துகள், ரயில்கள் என தங்களது பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் மக்கள் இடையூறின்றி பயணத்தை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது … Read more

இனிமேல் மெட்ரோ ரயிலில் பயணிக்க இது அவசியம்..! – மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.  தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் … Read more

இன்று முதல்…காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை -மெட்ரோ ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (மார்ச் 17) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 … Read more

வலிமை: போனி கபூர்,ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ்.!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படம் வெளியாகி 3 வது வரமாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அஜித்தின் வலிமை திரைப்படம் தன் படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக 1கோடி நஷ்ட ஈடு கேட்டு மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் உயர்நிதி மன்றத்தில் வழக்கு செய்திருந்தார். இதனையடுத்து சென்னை உயர்நிதி … Read more