முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுதலை – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

mk alagiri

வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, 2011ம் ஆண்டு மதுரை வேலூர் அருகே சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டபோது மு.க.அழகிரி, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அதிமுக தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான … Read more

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புதிய நூலகப் பிரிவு தொடக்கம்..!

Kalaignar Library

மதுரையில் கலைஞர் கூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. சுமார் 206 கோடி ரூபாய் செலவில் இந்த கலைஞர் நூலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் நுழைவு வாயிலில் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூலை 15-ஆம் தேதி திறந்து வைத்தார். நூலகத்தின் கீழ் தலத்தில் குழந்தைகளுக்கு என … Read more

விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!

Madurai High court

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது தங்கபாண்டியனிடம் விவசாயி ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் விவசாயியை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த தங்கபாண்டியனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அவர் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து … Read more

#BREAKING: பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது -நீதிபதி

மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவதை மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் தெரிவித்தார். மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்து இருந்தால் தனக்கு ஐஐஎஸ் பதவி உயர்வு கிடைத்து இருக்கும். இந்நிலையில், ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் ஆய்வுக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு … Read more

நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன..? -நீதிபதிகள்..!

ஐகோர்ட்டில் தேங்கிய நீரை அகற்ற கூறியும் இதுவரை ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரை புதுதாமரைபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்தார். அதில், வையை நீர் செல்லும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு  முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியார் வைகை நீர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு இரண்டு வாரத்தில் … Read more

#Breaking:படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?; நடிகர் எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய – நீதிபதி மறுப்பு..

பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறான கருத்து பகிர்ந்த நடிகர்எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து அவதூறான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்,கடந்த  2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். … Read more

மதுரை உயர்நீதிமன்ற கிளை அருகே செயல்பட்டு வரும் மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு!

மதுரையில் ஒத்தகடைப் பகுதியில், நீதிமன்றம் மற்றும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு. மதுரையில் ஒத்தகடைப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்பட்டு வருகிறது. இதனருகில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு … Read more

சாத்தான்குளம் வழக்கு விசாரணை! டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட  9 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சாத்தான் குளம்  தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை டிச.21ம் தேதிக்கு மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  சாத்தான் குளத்தில் ஜெயராஜ் – பெனிக்ஸ் இருவரும் சிறையில், காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, உயிரிழந்தனர்.  இவர்களது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 10 காவல்துறையினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிலாந்தர். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத சிறையில் சிறப்பு வகுப்பு … Read more

பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது! – உயர்நீதிமன்ற மதுரை கிளை

பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கரூரை சேர்ந்த செந்தில் என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது நிலத்தின் சர்வே எண்ணில் உள்ள தவறை சரி செய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத, தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு  உத்தரவிட்டார்.  இந்நிலையில்,இதுகுறித்து கூறிய நீதிபதி, … Read more

#Breaking#பிரேதப்பரிசோதனை அறிக்கை தாக்கல்!

சாத்தான்குளம் தந்தை – மகன் பிரேதப்பரிசோதனை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன்  மரணம் குறித்து தாமாக முன்வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  இம்மரணம் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.இன்று உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில்  உயிரிழந்தவர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தந்தை – மகன் பிரேதப்பரிசோதனை அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை மருத்துவக் கல்லூரி … Read more