ஒரு தேசத்துக்கு இரு சட்டங்கள் இருக்கக்கூடாது… மக்களவையில் பிரதமர் மோடி உரை!

pm modi

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்த முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவாதங்கள், வெளிநடப்புகள் என அரங்கேறியது. இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் … Read more

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை – பிரதமர் மோடி பேச்சு

pm modi

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் அன்று கூட்டத்தொடர் தொடங்கியது. இதன்பின் மறுநாள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி … Read more

தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறை – புதிய மசோதா தாக்கல்!

Exam Malpractices Bill

பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுத் தேர்வுகள் முறைகேட்டை தடுப்பதற்காக சட்ட மசோதா 2024ஐ  பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கால் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான விதிகள் உள்ளன. அதன்படி, தேர்வில் மோசடி செய்வபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க சட்டம் வழிவகுக்கிறது. மசோதாவை தாக்கல் செய்தபின் … Read more

பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை!

pm modi

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. … Read more

Winter Session: மாநிலங்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே நிறைவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. கடந்த 7ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா கால அட்டவணைக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராகப் பதவியேற்ற முதல் முழு அமர்வு இதுவாகும். ஜக்தீப் தன்கர் கூறுகையில், கிறிஸ்மஸ், பொங்கல், … Read more

#BREAKING: குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து – மசோதா நிறைவேற்றம்!

குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.  குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களவை ஒப்புதலை தொடர்ந்து மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் மசோதா ஒப்புதல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 2023ம் ஆண்டு இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்து, தமிழகத்தில் குருவிக்காரர் சமுதாயத்துக்கு … Read more

5G சேவை: 50 நகரங்களின் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் 5G சேவைகள் தொடங்கப்பட்ட 50 நகரங்களின் பட்டியலை பகிர்ந்த மத்திய அரசாங்கம். அதன்படி, இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும். மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, … Read more

ஆளுநர் செயல்பாடு – மக்களவையில் விவாதிக்க நோட்டீஸ்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் நோட்டீஸ். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 22க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றசாட்டியுள்ளார். அதன்படி, நீட் விலக்கு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என தனது நோட்டீஸில் … Read more

மக்களவை ஒரு மணி ரேம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்-க்கு மவுன அஞ்சலி. டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் நாளான இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் … Read more

#BREAKING: தாக்கலானது மின்சார சட்டத்திருத்த மசோதா.. நிலைக் குழுவுக்கு அனுப்பி வைப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்.  மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்  மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார்.  மின் கட்டணங்களை ஒழுங்குமுறை ஆணையங்களே மாற்றியமைக்க புதிய சட்டத்தில் கூடுதல் அதிகாரம் என கூறப்படுகிறது. மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்ட திருத்த மசோதா தாக்கல் … Read more