தென்மேற்கு சீனாவில் நிலச்சரிவு! மண்ணுக்குள் புதைந்த 47 பேர்!

southwest China landslide

தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் மண்ணிற்குள் புதைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் இருக்கும் கிராமம் தான் லியாங்ஷூய்குன். இந்த கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் புதைந்த வீடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளை … Read more

மலேசியா முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலி

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  9 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலச்சரிவானது அதிகாலை 3 மணி அளவில் முகாமில் இருந்தவர்கள்  தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்டுள்ளது.90க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருந்தனர் என்றும் அதில்  60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், 25பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.    

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு – 8 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் இன்று(ஜூலை 19) காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  8 பேர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. காங்ரா மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தின்படி, காலை 9 மணியளவில் ஒரு மாவு மில்லுக்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது,இதில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் மோக்தா தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கி பெண் பலி

சிம்லாவின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலி. மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் . இதைத்தொடர்ந்து இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலுவில் திடீரென ஏற்பட்ட மேகம் வெடிப்பால் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது . வெள்ளத்தில் ஏறத்தாழ 4பேர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சோஜ் கிராமத்திலும் மேகம் வெடிப்பு ஏற்பட்டது. இதில் 4 முதல் 6 பேர் காணவில்லை எனக்  கூறப்படுகிறது .

நேபாள நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!-2 பேர் மாயம்..!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இமய மலைப்பகுதிகளில் பருவக்காற்று தொடங்கியதுடன் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் நேபாளத்தில் உள்ள பார்பட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சில பேர் சிக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து மீட்கும் பணியில் உள்ள மீட்புப்படையினர், இதுவரை அப்பகுதியில் 6 உடல்களை மீட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போய் உள்ளனர் என்று இது குறித்து … Read more

உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு : 7 பேர் உயிரிழப்பு ….!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜீம்மா கிராமத்தை சுற்றியுள்ள ஜம்ரி, தார்கோட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து  வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் கனமழை காரணமாக ஜீம்மா கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் … Read more

உத்ரகண்ட் மாநில நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி..!

உத்ரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜும்மா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் சேற்றில் புதைந்து தரைமட்டமாகியது. இதுவரை இந்த நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று … Read more

மாநில பேரிடர் மீட்புப் படை : உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 200 பேர் மீட்பு!

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள தாமஸ் பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோர் மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம் ரைனி கிராமம் அருகே உள்ள தாமஸ் எனும் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ள நிலையில், இதுகுறித்து தகவலறிந்து மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது நிலச்சரிவில் சிக்கி இருந்த 200 பேரை மாநில பேரிடர் … Read more

உத்தரகண்ட் நிலச்சரிவிலிருந்து தப்பிய பேருந்து..!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியான நைனிடாலிலிருந்து பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது 14 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்றுள்ளது. சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பாறைகள் உருண்டோடியது. இந்த சம்பவத்தை தொலைவிலேயே கண்ட ஓட்டுநர் பேருந்தை நிலச்சரிவிற்கு தொலைவில் நிறுத்தியுள்ளார். இருந்தபோதிலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவை பார்த்து பயந்த பயணிகள் அனைவரும் … Read more

ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் சிக்கிய 23 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் கடந்த 11 ஆம் தேதி மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில்  ராம்பூர்-ஜூரி என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் உருண்டு மேல் விழுந்ததால், … Read more