காஷ்மீர் குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை.! பாகிஸ்தான் கடும் அதிருப்தி.!

Pakistan say about Article 370

கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட … Read more

“காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது” – பிரதமர் மோடி

pm modi

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதாவது, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது மூன்று வகையான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனி தீர்ப்பு நீதிபதி கவாய், சூர்ய காந்த், சஞ்சீவ் கண்ணா தனி தீர்ப்பு மற்றும் நீதிபதி கவுல் தனி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது … Read more

காஷ்மீர் – லடாக்.! சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது செல்லும்.! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!  

Supreme Court Chief Justice Chandrachud

இந்திய சட்டப்பிரிவு 370இன் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அம்மாநிலத்தில் சொத்து பரிமாற்றங்கள் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் இந்திய சட்டங்கள் அங்குள்ள சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அந்த சட்டத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்தன. இதனை கடந்த 2019ஆம்  ஆண்டு  ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது … Read more

கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி லடாக்கில் நிறுவப்பட்டுள்ளது…!

கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி லடாக்கின் லே எனும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, லடாக்கிலுள்ள லே எனும் பகுதியில் கதர் துணியினால் செய்யப்பட்ட மிகப்பெரிய தேசிய கொடி நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடி 225 அடி நீளமும், 150 அடி அகலமும், 1000  கொண்டது என கூறப்படுகிறது. காலையில் நடைபெற்ற தேசிய கொடியை நிறுவும் நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர் கே மாத்துர், … Read more

எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது – ராணுவ தளபதி

லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவ படை தயார் நிலையில் உளது என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தகவல். லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லையில் சீனா ராணுவ படையை குவித்து வருவதாக இந்தியா குற்றசாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவ படைகளை நிலைநிறுத்தி உள்ளது. இதனால் இந்தியா – சீனாவு விவகாரத்தில் … Read more

கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளில் சென்று தாக்குதல் ஒத்திகை …!

கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளில் சென்று தாக்குதல் ஒத்திகை செய்துள்ளனர். இந்தியா மற்றும் சீனப் படைகள் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவ வீரர்கள் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் தாக்குதல் ஒத்திகை நடத்தி வருகின்றனர். குறிப்பாக லடாக் பகுதியின் கிழக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கி வைத்து தாக்குதல் ஒத்திகை நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள … Read more

#BREAKING : கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் அத்துமீறவில்லை – இந்திய ராணுவம்..!

கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் அத்துமீறலில் ஈடுபடவில்லை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் நமது படைகளோ , சீனப் படைகளோ அத்துமீறிவில்லை என இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சீன படையினர் அத்துமீறியதாகவும், இந்திய படைகள் குவிக்கப்பட்டதாகவும் வெளியான தகவலுக்கு இடையில் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் அத்துமீறலில் ஈடுபடவில்லை. சர்ச்சைக்குரிய பகுதியை தாண்டி இந்திய படைகளும் செல்லவில்லை எனவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. பிப்ரவரியில் சர்ச்சைக்குரிய இடத்தில் … Read more

பிரதமர் ஒரு கோழை , அவர் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் – ராகுல் காந்தி

பிரதமர் மோடி   இந்தியாவிற்கு சொந்தமான இடங்களை சீனாவிடம் கொடுத்துவிட்டார் என்று ராகுல் காந்தி கேள்வி தெரிவித்துள்ளார்.  நேற்று நாடாளுமன்ற அவைகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை’ குறித்து விளக்கம் அளித்தார்.அவர் அளித்த விளக்கத்தில்,எல்லையில் பதற்றத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு இன்ச் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.லடாக் எல்லையில் எந்த சோதனை ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்று பேசினார். இந்நிலையில் … Read more

#BREAKING: சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு.!

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடுத்துள்ளது.  சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. அதாவது ரோந்து பணியின்போது எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயற்சி செய்ததை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ஊடுருவ முயற்சியை கைவிடாததால் ஏற்பட்ட இருதரப்பு தள்ளுமுள்ளில் 20 சீன வீரர்கள் மற்றும் 4 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் லடாக்கை சீனாவுக்கு சொந்தமாக்கிய டுவிட்டர்… இதற்கு 8 ஆண்டு சிறை தண்டனை…

சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் அந்த சமுக வலைதள நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா-2019 தொடர்பாக டுவிட்டர் பிரதிநிதிகள் குழு ஒன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகியது. அப்போது லடாக் சர்ச்சை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் … Read more