அமெரிக்க சுதந்திர தினவிழாவில் துப்பாக்கி சூடு : கொலையாளி மீது 117 வழக்குகள்…

அமெரிக்க சுதந்திர தினத்தில் 7 பேரை கொலை செய்த கொலைகாரன் மீது மொத்தமாக 117 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அண்மையில் ( ஜூலை 4 ) நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிகாகோ மாகாண பகுதியில் திடீரென ராபர்ட் கிரிமோ எனும் 22 வயது இளைஞன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான். இதில், 7 பேர் கொல்லப்பட்டனர். அந்த கொலைகாரன் சம்பவத்தன்று பெண் வேடமணிந்து தப்பிக்க நினைத்தான். ஆனால், அன்று மாலையே அந்த கொலைகாரனை போலீசார் பிடித்துவிட்டனர். … Read more

7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலிற்கு வில்லனாக நடித்து வருகிறார். என்னதான், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வந்தாலும், பல ரசிகர்கள் வாலி, குஷி, போன்ற ஹிட் படங்களை போல ஒரு படம் இயக்கி மீண்டும் ஒரு பெரிய ஹீட் கொடுப்பாரா என காத்துள்ளனர். அந்த வகையில், அதற்கான தகவல் … Read more

வில்லனாக மிரட்டியாச்சு.! மீண்டும் இயக்குனராக மிரட்ட வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.!

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என களமிறங்கியவர் எஸ்.ஜே.சூர்யா. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் படங்களை இயக்க தொடங்கினார். அதன்படி , விஜய் வைத்து குஷி, அஜித்தை வைத்து வாலி ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின், அவரே இயக்கி  ” நியூ” படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இறைவி திரைப்படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார். … Read more

கிளி ஜோசியரின் கொலை வழக்கில் கொலையாளி பரபரப்பு வாக்கு மூலம்

வழிபோக்கு ஜோதிடத்தை நம்பி, கிளி ஜோசியரை கொலை செய்ததாக அக்கவுண்டன்ட் ரகு வாக்கு மூலம் அளித்துள்ளார். திருப்பூர், குமரன் சாலையில் உள்ள புங்கா அருகே டிசம்பர் 24ம் தேதி கிளி ஜோதிடர் ரமேஷ் ஹெல்மெட் அணிந்த நபரால் கொடுராமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. திருப்பூர் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளியை தேடி வந்த நிலையில், டிசம்பர் 26ம் தேதி சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் … Read more

பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் பலி….!!

பாதுகாப்பு படையுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பாசிஸ்ட்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸாரை நோக்கி மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால்  சூட்டனர்.இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட்-கள்  கொல்லப்பட்டு , ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக டி.ஐ.ஜி பன்காஜ் கூறியுள்ளார்.