முல்லை பெரியாறு அணை விவகாரம்.! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த கேரள அரசு.!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமானது 136 அடியை எட்டியதும் அதனை திறந்து வைகை அணைக்கு கொண்டு சேர்க்கவும், உபரி நீரை திறந்துவிடவும் கேரள அரசானது, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதே போல, இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையும் வினாடிக்கு 6500 கனஅடி நீர் வீதம் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டமானது உயர்ந்து கொண்டே வருகிறது. … Read more

மூணாறு நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு – பினராயி விஜயன்

கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு. கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும்,  இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். ராஜமலையில் இடுகியில் நிலச்சரிவு ஏற்பட்ட … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,420பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,420 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,715  பேர் குணமடைந்தனர். இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழப்பு . இதில் திருவனந்தபுரத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி தினகரன்

கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகிற நிலையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் … Read more

‘back to home’ – கேரள விமான விபத்தில் உயிரிழந்தவரின் இறுதி முக நூல் பதிவு!

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவரின் இறுதி முக நூல் பதிவு. துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் … Read more

#Breaking : கேரள விமான விபத்து ! உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் … Read more

கேரளா முதல்வரை பாதுகாக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் பதிவு!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து இழப்பீடு வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது கேரள பகுதியில் உள்ள மூணாறு அடுத்த பகுதி அருகே உள்ள பெட்டிமடி எனும் தேயிலைத் தோட்டப் பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த தோட்டத் … Read more

கோழிக்கோடு விமான விபத்து – இரங்கல் தெரிவித்த கமல்!

கேரளா கோழிக்கோடு விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன். கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையமாகிய கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று இரவு மழை காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமானம் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பலரும் இந்த விமான விபத்துக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விமான விபத்தில் இரண்டு பைலட்களும் உயிரிழந்துள்ளனர். … Read more

கேரள விமான விபத்து : ஒரே ஒருவரை தவிர மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.! – கேரளா எம்.பி தகவல்.!

ஒரே ஒருவரை தவிர விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். அவர் விமானத்தினுள் சிக்கியுள்ளார். ஆனால், அவர் பத்திரமாக இருக்கிறார். – எம்.பி E.T.முகம்மது பஷீர். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. இதில், ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், விமானத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள்  கோழிக்கோடு மருத்துவமனை … Read more

கேரள விமான விபத்து.! ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்.!

கேரளா விமான விபத்துக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வருத்தத்தை பதிவிட்டார். மேலும், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யவும் டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்தார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் … Read more