#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு?

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வந்த  நிலையில், அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் சபாநாயகர் நடத்தவில்லை. கர்நாடகா சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி  சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், ஷங்கர் என … Read more

பாஜக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி!பேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசின் மீது  நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில்  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் சட்டப்பேரவையில் குற்றச்சாட்டியுள்ளார். கடத்தப்பட்ட எம்.எல்.ஏக்களை மீட்டு தருமாறு சபாநாயகரிடம் அமைச்சர் சிவக்குமார் கோரிக்கை  விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் புகைப்படங்களை காட்டி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். இதனால் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர் பாஜக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள். அமளியால் கர்நாடக பேரவையை அரை மணி நேரம் ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.