மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி.. 2 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 51 விருப்ப மனுக்கள்…

DMK MP Kanimozhi

Kanimozhi MP – மக்களவை தேர்தல நெருங்கும் வேளையில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு என நிறைவு செய்து வேட்பாளரை அறிவிக்கும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. ஏற்கனவே பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. காங்கிரஸ் மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!  திமுக, அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைமை … Read more

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன்… வெள்ள பாதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை.!

Central Minister Nirmala Sitharaman visit Thoothukudi

தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பல பகுதிகள் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்வழி பகுதிகளில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, பெரும்பாலான குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. கடந்த பத்து நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் இந்த வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியலமைப்பினர் தன்னார்வலர்கள் … Read more

திமுக எம்.பி. கனிமொழி மீட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Kanimozhi

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.  இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி … Read more

தூத்துக்குடியில் கனமழை… அவசர உதவி எண்களை வெளியிட்டார் கனிமொழி எம்.பி!

தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மிக கனமழையால், பல்வேறு இடங்கல் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. பெரிதும் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை … Read more

தன் கையால் மாணவர்களுக்கு பரிமாறி காலை உணவு திட்டதை தொடங்கி வைத்தார் எம்.பி கனிமொழி.!

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, இன்று தூத்துக்குடியில் எம்.பி கனிமொழி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைத்தார்.  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். இன்று அதே போல பல்வேறு மாவட்டங்களில் ஆளும்கட்சியினர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி எம்.பி … Read more

தமிழ்தாய் வாழ்த்து: இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? – கனிமொழி எம்பி காட்டம்

ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? என்று தமிழ்தாய் பாடல் விவகாரத்தில் கனிமொழி எம்பி ட்வீட். நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி … Read more

காவிரியை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை – கனிமொழி

தமிழகத்தின் அடையாளமான திகழும் நம் காவிரி மாசுபடுவதை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி ட்வீட். திமுக மகளிர் அணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், காவிரி ஆறு, மருந்து கழிவுகளாலும், ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், பூச்சி கொல்லிகளாலும், மிகவும் மாசு பட்டிருப்பதாகத் ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து கழிவு, ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றால் காவிரி மாசுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. … Read more

“பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!

தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக – பாஜக இடையே போட்டி என்று வி‌‌.பி. துரைசாமி கூறியிருக்கலாம் என கூறிய அமைச்சர், 2011 -ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சியானது போல தற்பொழுது பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கனிமொழி எம்.பி 1.50 கோடி நிதி வழங்கினார்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரணம் கோரி மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அடுத்து, பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்ற மக்களவை கழக குழு  துணை தலைவருமான கனிமொழி , தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் மீண்டும் 50 லட்சம் … Read more

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது -கனிமொழி

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது  என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை. மக்களை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் மத்திய மாநில அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.