#BREAKING: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் – ஓபிஎஸ் அறிவிப்பு

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவிப்பு. தேனி பெரியகுளத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் தெரிவித்துள்ளார். ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், … Read more

#BREAKING: அதிமுக பொதுக்குழு செல்லும் – தீர்ப்பின் முழு விவரம் வெளியீடு!

இரு தலைவர்களும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதன் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த … Read more

#BREAKING: அதிமுக பொதுக்குழு – தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் … Read more

#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – சற்று நேரத்தில் தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. அதன்படி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் … Read more

அதிமுக அலுவலகம் சீல் – தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு. அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது.  வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் பார்க்க வேண்டும் என கூறி அவற்றையும் தாக்கல் செய்தது காவல்துறை. இதனால் காவல்துறை பதில் மனுவுக்கு ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அலுவகலகத்திற்கு … Read more

#BREAKING: வந்தது தீர்ப்பு.. 10 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தனது காதலியுடன் திருச்செங்கோடு கோவிலுக்குச் சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, தேடப்பட்டு வந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசில் யுவராஜ் சரணடைந்தார். அவரோடு … Read more

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் – சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த 2019 மே 5 முதல் … Read more

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சற்று நேரத்தில் தீர்ப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம். சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது மதுரை சிறப்பு நீதிமன்றம். கடந்த 2015 ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், கோகுல்ராஜ் மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை … Read more

நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு – 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருமே குற்றவாளிகள் என தீர்ப்பு. புதுச்சேரியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி (மத்திய அமைச்சராக இருந்தபோது) வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த விசாரணையில் தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் உள்பட 6 … Read more

50% ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் ஆக.25ல் தீர்ப்பு!

மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி தீர்ப்பு. மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி தீர்ப்பு வழங்கபடுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. திமுக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு … Read more